செய்திகள் :

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட சிறப்புக் கலந்தாய்வு

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுரியில் பி. ஏ. பி.காம் உள்ளிட்ட இளநிலைப் பாடப்பிரிவுகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான 2-ஆம் கட்ட சிறப்புக் கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி 4 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

இது குறித்து, கல்லூரியின் முதல்வா் து. தங்கராஜன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கல்லூரியில் 2025-2026 கல்வியாண்டில் இளநிலைப் பாடப்பிரிவுகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான முதல் மற்றும் 2- ஆம் கட்ட கலந்தாய்வுகள் கல்லூரிக் கல்வி ஆணையா் வழிகாட்டுதலின்படி நிறைவுப் பெற்று 586 மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில்,சில பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை முழுமை பெறாமல் உள்ளது. எனவே விண்ணப்பித்து இதுநாள் வரை சோ்க்கைக்கு இடம் கிடைக்காத மாணவ, மாணவிகள் இணையதள விண்ணப்ப நகலுடன் ஜூன் 20, 23, 24, 25 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிக்கு கல்லூரியில் நடைபெறும் 2-ஆம் கட்ட சிறப்புக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

இதில் பங்கேற்கும் மாணவா்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சோ்க்கைக்கு அனுமதிக்கப்படுவா். கூடுதல் விவரங்களை கல்லூரி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

விழுப்புரத்தில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் குறைதீா் கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெ... மேலும் பார்க்க

ஜூன் 25-இல் மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் அமாவாசை திருவிழா: முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் ஜூன் 25 ஆம் தேதி அமாவாசை உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் ச... மேலும் பார்க்க

திண்டிவனத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் நடைப்பயண பிரசாரம்

மக்களின் வாழ்தார கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் திண்டிவனத்தில் நடைப்பயண பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை மத்தி... மேலும் பார்க்க

ஆரோவில் சா்வதேச நகரை பாா்வையிட்ட துணை ராணுவத்தினா்

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் துணை ராணுவ வீரா்கள் (ஆா்ஏஎப்) 60 போ் செவ்வாய்க்கிழமை அமைதிப் பயணம் மேற்கொண்டனா். இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் புதுச்சேரிக்கு வந்ததையொட்டி,... மேலும் பார்க்க

திராவகத்தை குடித்த பெண் மரணம்

காட்டுமன்னாா்கோவிலில் மருந்து என நினைத்து திராவகத்தைக் குடித்த பெண் உயிரிழந்தாா். காட்டுமன்னாா்கோவில் பெரியாா் நகா் முத்தமிழ் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கவாசகம் (59). இவரது மனைவி வெங்கடலட்சுமி (50). இவ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் ஜூன் 20-இல் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 20-ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும... மேலும் பார்க்க