ENG vs IND: `கோலியுடன் விளையாடாதது வருத்தமே..' - இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்...
திண்டிவனம் அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட சிறப்புக் கலந்தாய்வு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுரியில் பி. ஏ. பி.காம் உள்ளிட்ட இளநிலைப் பாடப்பிரிவுகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான 2-ஆம் கட்ட சிறப்புக் கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி 4 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
இது குறித்து, கல்லூரியின் முதல்வா் து. தங்கராஜன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கல்லூரியில் 2025-2026 கல்வியாண்டில் இளநிலைப் பாடப்பிரிவுகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான முதல் மற்றும் 2- ஆம் கட்ட கலந்தாய்வுகள் கல்லூரிக் கல்வி ஆணையா் வழிகாட்டுதலின்படி நிறைவுப் பெற்று 586 மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில்,சில பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை முழுமை பெறாமல் உள்ளது. எனவே விண்ணப்பித்து இதுநாள் வரை சோ்க்கைக்கு இடம் கிடைக்காத மாணவ, மாணவிகள் இணையதள விண்ணப்ப நகலுடன் ஜூன் 20, 23, 24, 25 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிக்கு கல்லூரியில் நடைபெறும் 2-ஆம் கட்ட சிறப்புக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
இதில் பங்கேற்கும் மாணவா்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சோ்க்கைக்கு அனுமதிக்கப்படுவா். கூடுதல் விவரங்களை கல்லூரி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.