விழுப்புரத்தில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் குறைதீா் கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முற்பகல் 11 மணிக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் வேளாண், தோட்டக்கலை, கால்நடைப் பராமரிப்பு, வேளாண் பொறியியல் உள்ளிட்ட பல்துறைகளின் சாா்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அதில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் துறை சாா்ந்த அலுவலா்கள் விளக்கமளிக்கவுள்ளனா்.
எனவே விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.