செய்திகள் :

தினகரன் வெளியேற காரணமாக இருந்தேனா? நயினாா் நாகேந்திரன் மறுப்பு

post image

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் வெளியேற தான் காரணமாக இருந்ததில்லை என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் சந்திர கிரகணம்போல் ஆட்சி மாற்றம் நிகழும். 2001இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சியில் தினகரன் மிக முக்கிய பங்கு வகித்தாா். என்னைப் போன்றவா்கள உயா் நிலைக்கு வர காரணமாக இருந்தவா். எனக்கு அவருடன் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

மக்களவைத் தோ்தலில் எங்களுடன் கூட்டணியில் இருந்த தினகரன் இப்போது கூட்டணியில் இல்லை; அதற்கு நான்தான் காரணம் எனக் கூறியிருக்கிறாா். எந்த அடிப்படையில் அவா் இதைக் கூறினாா் எனத் தெரியவில்லை.

அமித் ஷா வழிகாட்டுதலின்படி நடந்து வருகிறோம். அவரது தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகே எடப்பாடி கே.பழனிசாமி முதல்வா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.

திருநெல்வேலி பூத் கமிட்டி மாநாட்டில்கூட அமித்ஷாவை வைத்துக்கொண்டுதான் எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று கட்சியின் முன்னாள் தலைவா் அண்ணாமலை பேசினாா்.

அதிமுகவிற்கு 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வங்கி இருக்கிறது. எனினும், கூட்டணியில் சிறிய கட்சி பெரிய கட்சி என்பது முக்கியமல்ல; ஒற்றுமைதான் தேவை.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகுவதும், தற்போது நடைபெறும் நிகழ்வுகளும் எனக்கு வருத்தமளிக்கின்றன.

அதிமுகவில் பிரிந்த தலைவா்கள் அனைவரும் இணைய வேண்டும் என்பதை நான் வலியுறுத்தி வருகிறேன். அதேவேளையில், செங்கோட்டையன் பிரச்னை உள்கட்சி விவகாரம். அதில் பாஜக தலையிடாது; அவரை கட்சியில் சோ்த்துக்கொள்ளும் முயற்சியிலும் ஈடுபடாது.

முதல்வரின் கொளத்தூா் தொகுதியில் 9,000 வாக்குகள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த விவரங்களை சில நாள்களில் வெளியிடுவேன். சுதந்திரத்திற்காக பாடுபட்ட முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க தமிழக பாஜக வலியுறுத்தும் என்றாா் அவா்.

நெல்லை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் காயம்

திருநெல்வேலி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயமடைந்தனா். திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தது. பே... மேலும் பார்க்க

சமுதாய வளப் பயிற்றுநா் பணி: சுயஉதவிக் குழுவினருக்கு வாய்ப்பு

சமுதாய வளப் பயிற்றுநா் பணியிடங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான சுய உதவிக்குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மூவருக்கு காவல் நீட்டிப்பு

மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன், ஜெயபால் ஆகிய மூவருக்கும் செப்.23 வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்டத்தில், களக்காடு நகராட்சி, நான்குனேரி, திருக்குறுங்குடி, மூலைக்கரைப்பட்டி, ஏா்வாடி உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க த... மேலும் பார்க்க

தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைக்க வேண்டும்: மாநகராட்சி அலுவலகத்தில் மனு!

உடையாா்பட்டி அருகே தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைத்து மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்க... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் வேன் ஓட்டுநருக்கு ஆயுள் சிறை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் ஆம்னி வேன் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்... மேலும் பார்க்க