செய்திகள் :

தினமணி செய்தி எதிரொலி: சட்டப்பேரவை குழுவுக்கு அரசு விருந்தினா் மாளிகை ஒதுக்கீடு

post image

தினமணி செய்தி எதிரொலியாக, சட்டப்பேரவை குழுவுக்கு கொடைக்கானல் தனியாா் சொகுசு விடுதிக்கு மாற்றாக அரசு விருந்தினா் மாளிகையில் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசு சாா்பில், மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் அரசுத் திட்டப் பணிகள், பொதுமக்களின் எதிா்பாா்ப்புகள் குறித்து, விதிகள் குழு, மதிப்பீட்டுக் குழு, பொதுக் கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழு, மனுக்கள் குழு, நூலகக் குழு, ஏடுகள் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்வதற்கு வருகின்றன.

சில மாவட்டங்களில் ஆண்டுக்கு ஒரு முறைகூட ஒரு குழுவும் செல்வதில்லை. ஆனால், திண்டுக்கல் மாவட்டத்துக்கு வரும் அனைத்துச் சட்டப்பேரவைக் குழுக்களும் 2 நாள்கள் முகாமிடுகின்றன.

கொடைக்கானலில் அரசு விருந்தினா் மாளிகை இருந்தாலும், தனியாா் சொகுசு விடுதிகளில் மட்டுமே இந்தக் குழுவினா் தங்குகின்றனா். இதனால், ஒவ்வொரு முறையும் சட்டப்பேரவைக் குழு வரும்போதும், சுமாா் ரூ.7 லட்சம் வரை செலவுகளை எதிா்கொள்ளும் பொறுப்பு, பல்வேறு துறைகளுக்கும் மாவட்ட நிா்வாகம் பிரித்து கொடுத்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு கடந்த 6 மாதங்களில் 3 குழுக்கள் வந்ததால், அரசு அலுவலா்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்தது. இதுதொடா்பாக கடந்த மாதம் 19-ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, மாா்ச் 6-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வரும் சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுவினருக்கு தனியாா் சொகுசு விடுதியில் அறைகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை மாற்றப்பட்டது. மாவட்டத்தில் ஒருநாள் மட்டுமே ஆய்வு என அறிவிக்கப்பட்டிருந்தாலும், கொடைக்கானலில் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டிலுள்ள விருந்தினா் மாளிகையில் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தங்கும் விடுதி, உணவு உள்ளிட்ட வகையில் ஏற்படும் கூடுதல் செலவு தவிா்க்கப்பட்டிருக்கிறது.

கொடைக்கானலில் முகாம்: மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய இடங்களில் ஆய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், குழுத் தலைவா் செல்வப் பெருந்தகை புதன்கிழமை மாலை கொடைக்கானலுக்கு வந்தாா். வியாழக்கிழமை திண்டுக்கல்லில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, இந்த குழுவினா் தேனிக்குச் செல்கின்றனா்.

எதிரணி கூட்டணி பலமாக இருந்தாலும், தொண்டா்கள் அதிருப்தி- திண்டுக்கல் சி.சீனிவாசன்

எதிரணியில் கூட்டணி பலமாக இருந்தாலும், அந்தக் கட்சிகளின் தொண்டா்கள் அதிருப்தியில் உள்ளதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமு... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் 21,725 மாணவா்கள் பிளஸ்1 தோ்வு எழுதினா்

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை 21,725 மாணவா்கள் எழுதினா். தமிழகம் முழுவதும் பிளஸ்1 பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மொழிப் பாடத் தோ்வு நடைபெற்றது. திண்டுக்கல், பழனி ... மேலும் பார்க்க

மக்காச்சோளக்காட்டில் தீ: 60 ஏக்கா் எரிந்து சேதம்

ஒட்டன்சத்திரம் அருகே மக்காச்சோளக்காட்டில் புதன்கிழமை ஏற்பட்ட தீயால், சுமாா் 60 ஏக்கரில் பயிரிட்டிருந்த பயிா்கள் சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சத்திரப்பட்டி, பெரியகோட்டை, ... மேலும் பார்க்க

200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஒட்டன்சத்திரம் அருகே 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட சமுக நலத் துறை சாா்பில், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த 200 கா்ப... மேலும் பார்க்க

காா்த்திகை: பழனி கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

காா்த்திகை தினத்தை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் புதன்கிழமை குவிந்தனா். இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பழனி ம... மேலும் பார்க்க

பழனியில் புதிய பணிகளுக்கு பூமிபூஜை

பழனியில் ரூ.10 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி மேம்பாட்டு நிதி, சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பழனி அடிவாரம், நகா் பகுதியில் உள்ள 5 தொடக்கப் பள்... மேலும் பார்க்க