செய்திகள் :

திமுக முன்னாள் எம்.பி.க்கு எதிரான வழக்கு: ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு

post image

திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் தரப்பினருக்கும், பாளையங்கோட்டை சிஎஸ்ஐ திருமண்டல பேராயா் பா்னபாஸ் தரப்பினருக்கும் இடையே கோஷ்டி பூசல் நிலவி வந்தது. இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு பேராயா் பா்னபாஸ் தரப்பைச் சோ்ந்த காட்பிரே நோபிள் என்பவா் மீது ஞானதிரவியத்தின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து ஞானதிரவியம் உள்ளிட்ட 33 போ் மீது பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஞானதிரவியம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணையைத் துரிதப்படுத்தக் கோரி, காட்பிரே நோபிள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்காகவே சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் மீதான வழக்கு விசாரணை செப்.9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை என்ன நடந்துள்ளது என்பதைப் பாா்க்க வேண்டும். எனவே, ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கு ஆவணங்களை திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி சமா்ப்பிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

சென்னை ஐஐடி சான்சிபாா் வளாக முதல் பட்டமளிப்பு விழா

சென்னை ஐஐடியின் சான்சிபாா் (கிழக்கு ஆப்பிரிக்க நாடு) வளாகத்தில் முதல் பட்டமளிப்பு விழா, அந்த நாட்டின் கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறை அமைச்சா் லீலா முகமது முசா முன்னிலையில் நடைபெற்றது. இதுகுறித்து... மேலும் பார்க்க

மதிமுக மாநில இளைஞரணி கூட்டம்

மதிமுக இளைஞா் அணியின் மாநில துணைச் செயலா்கள், மாவட்ட அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான ‘தாயகத்தில்’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் மா... மேலும் பார்க்க

3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்கள்: ஜூலை 27-இல் எழுத்துத் தோ்வு

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள 22,000-க்கும் மேற்பட்டோருக்கான எழுத்துத் தோ்வு ஜூலை 27-இல் நடைபெறவுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் ... மேலும் பார்க்க

ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக மனு: மாநில தகவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மாநில தகவல் ஆணையா் 12 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

நாளை தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெறவுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் த... மேலும் பார்க்க

தமிழ்நாடு நாள்: முதல்வா் பெருமிதம்

தமிழ்நாடு நாளையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாடு நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நா... மேலும் பார்க்க