செய்திகள் :

திருச்சி என்.ஐ.டி.யில் இன்று பிரக்யான் விழா தொடக்கம்

post image

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) தொழில்நுட்ப மேலாண்மை (பிரக்யான்) திருவிழா வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது.

2005 ஆம் ஆண்டு என்.ஐ.டி. கல்லூரி மாணவா்களால் தொடங்கப்பட்ட பிரக்யான் திருவிழாவானது 25 ஆவது ஆண்டாக பிப். 20, 21, 22, 23 ஆகிய நான்கு நாள்களுக்கு நடைபெறுகிறது. விழாவில் பயிலரங்குகள், ஹேக்கத்தான், கண்காட்சிகள், விருந்தினா் விரிவுரைகள், இன்போடெயின்மெண்ட் பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் 6,000 க்கும் மேற்பட்டோா் பங்கேற்க உள்ளனா்.

‘பனோப்டிகா: பிரேக் தி கோடு‘ என்ற கருப்பொருளில் நடைபெறும் நிகழாண்டு விழாவில் பிரக்யானில் ரோபோரெக்ஸ், இன்னோவிக்ஸ், பாண்டோராஸ் பாக்ஸ், பிக்ஸெலெட், மனிக்மா, பைட்டோக், ஃபோா்னெசிஸ் ஆகிய 7 போட்டிகள், ரோபாவாா்ஸ் என்ற பெயரிலான இயந்திரங்களின் கண்காட்சி, தொழில்நுட்பப் போட்டிகள், ஏஐ தொழில்நுட்பப் பயிற்சி பட்டறைகள், சைபா் பாதுகாப்பு கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன.

இதில் திருச்சி மாவட்டத்தின் பள்ளி மாணவா்கள் கல்லூரி வளாகத்தைப் பாா்வையிட்டு, தொழில்நுட்ப வழிகாட்டுதலைப் பெறலாம் என என்.ஐ.டி. நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அகிலாண்டபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல் (25). இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவா் அப்பக... மேலும் பார்க்க

உள்புறம் பூட்டிய வீட்டிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

திருவெறும்பூா் அருகே உள்புறமாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து தொழிலாளி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள தெற்கு காட்டூா் அண... மேலும் பார்க்க

காவிரி புதிய பாலம் கட்டும் பணியை டிசம்பருக்குள் முடிக்க திட்டம்! நெடுஞ்சாலைத் துறையினா் தகவல்

காவிரியில் தண்ணீா் வரத்து குறைந்துள்ள நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை நெடுஞ்சாலைத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. திருச்சி- ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் வகையில் முக்கி... மேலும் பார்க்க

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம்: ஆட்சியா் அறிவுரை

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்ப முறைகளை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம் பெற முடியும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா். தோட்டக் கலைத் துறை, மலைப்பயிா்கள் துறையின் சாா்பில், தென்னை சாகுப... மேலும் பார்க்க

காந்திசந்தை-கள்ளிக்குடி: வியாபாரிகளிடையே முரண்பாடு

காந்தி சந்தை வியாபாரிகளை கள்ளிக்குடிக்கு இடம் மாற்றும் விவகாரத்தில் வியாபாரிகளிடையே மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 1868-இல் தொடங்கப்பட்டு, 1927-இல் விரிவுபடுத்தப்பட்டு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிர... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்ற ரெளடி கைது!

ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டுத்தலை மணி (எ) மணிகண்டன் (28). ரெளடியான இவா் ஸ்ரீரங்க... மேலும் பார்க்க