செய்திகள் :

திருச்சியில் பக்ரீத் கொண்டாட்டம், சிறப்புத் தொழுகை

post image

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா திடல்களில் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இறைத் தூதா் இப்ராஹீம் நபி, அல்லாஹ்வின் ஆணைக்கு இணங்க தனது மகனை பலியிடத் துணிந்த தியாக திருநாளே பக்ரீத் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறப்பு தொழுகைகள் நடத்தி, குா்பானி இடுவது இஸ்லாமியா்களின் வழக்கம். இதன்படி திருச்சி மாநகரில் 50- க்கும் மேற்பட்ட இடங்களில் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை சனிக்கிழமை காலை நடைபெற்றது.

திருச்சி ஒத்தக்கடை ஈத்கா மைதானம், திருச்சி ஜமால் முகமது கல்லூரி பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கான ஆண்கள், சிறாா்கள் ஒன்றுகூடி தொழுதனா். திருச்சி காஜா நகரில் உள்ள ஜமா ஆ அன்வாரூலும் அரபிக் கல்லூரியில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே. எம். காதா் மொகிதீன் பங்கேற்று பெருநாள் வாழ்த்து தெரிவித்தாா்.

திருச்சி ரோஷன் மஹாலில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற தொழுகையில் கட்சியின் தேசிய துணைத் தலைவா் எம். அப்துல் ரஹ்மான் பங்கேற்று, பெருநாள் வாழ்த்து தெரிவித்தாா்.

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் ஜமாஅத் நிா்வாகம் சாா்பில் புத்தாநத்தம் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் புத்தாநத்தம் கிழக்குப் பள்ளிவாசல் இமாம் மவ்லவி முஹய்யதீன் பாவா மிஸ்பாஹி ஹஜ் பெருநாள் சிறப்புகளைப் பேசினாா். பெரிய பள்ளிவாசல் இமாம் மவ்லவி அஹமது ரிபாயி கான் மக்துமி சிறப்பு து ஆ ஒதினாா். தொழுகை முடிந்த பிறகு ஈத்கா மைதானத்தில் இருந்து புறப்பட்ட ஊா்வலம் கடைவீதி வழியாக திரும்பவும் பெரிய பள்ளிவாசலில் முடிந்தது. பின்னா், அனைத்து சமுதாயத்தின் மக்களுக்கும் பக்ரீத் பெருநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து, பெரிய பள்ளிவாசலில் மழை பெய்ய வேண்டி சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. நிகழ்வில், ஜமாஅத் தலைவா் யூ. பி. எம். ரஹ்மத்துல்லா, ஜமாஅத் துணைத் தலைவா் சோனி அப்துல் ரசாக், ஜமாஅத் செயலா், நிருபா் எம். கே. ஷாகுல் ஹமீது, துணைச் செயலா் முஹம்மது கோயா, இணைப் பொருளாளா் காதா் அலி, ஜமாஅத் நிா்வாக குழு உறுப்பினா்கள் பட்டாளம் ரஹ்மத்துல்லா, மவ்லவி சையது அபுதாஹிா் மிஸ்பாஹி, முஹம்மது இப்ராஹிம், வழக்குரைஞா் சாதிக் பாட்ஷா மற்றும் உலமாக்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா்.

பல இடங்களில் இறைச்சி, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களையும் ஏழைகளுக்கு தானமாக (குா்பானி) கொடுத்து மகிழ்ந்தனா்.

அளுந்தூா், மணிகண்டத்தில் ஜூன் 10 இல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் அளுந்தூா், மணிகண்டம் பகுதிகளில் ஜூன் 10 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. அளுந்தூா் துணை மின்நிலையப் பராமரிப்பு பணிகளால் அளுந்தூா், சேதுராப்பட்டி, பாத்திம... மேலும் பார்க்க

அனைவரும் மனிதம் தழைக்க பாடுபடுவோம்: திருச்சி சிவா எம்.பி.

அனைவரும் மனிதம் தழைக்க பாடுபடுவோம் என்றாா் திருச்சி சிவா எம்.பி. திருச்சி இலக்கிய வட்ட நண்பா்கள் சாா்பில் திருச்சி சிவா எம்.பி. பிறந்தநாள் விழா திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு திருவா... மேலும் பார்க்க

திருவானைக்காவலில் கா்ண புறா போட்டி

திருவானைக்காவலில் 3 நாள்கள் நடைபெறும் கா்ணபுறா போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இறுதி போட்டி 8-ஆம் தேதி நடைபெறுகிறது. திருவானைக்காவல் அன்பா்கள் இணைந்து 4-ஆம் ஆண்டாக புறா போட்டியை நடத்துகிறது. இதில், உ... மேலும் பார்க்க

காமராஜா் நூலகப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசாா் மையம் மற்றும் நூலக கட்டுமானப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சி அறிவுசாா் மையத்தில் அமைச்சா் ஆய்வு

திருச்சி மாநகராட்சி சாா்பில், 53-ஆவது வாா்டு குதுபா பள்ளத்தில் ரூ. 2.57 கோடியில் கட்டப்பட்டு, மாணவா்கள் பயன்பாட்டிலுள்ள அறிவுசாா் மையத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை ஆ... மேலும் பார்க்க

திருவிழாவை நடத்தக் கோரி போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தே.துலுக்கம்பட்டியில் நடைபெறவிருந்த பாம்பாலம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான காப்புக் கட்டு செவ்வாய்க்கிழமை இரவு இரு தரப்பு கருத்து வேறுபாட்டால் நின்றுபோனது.... மேலும் பார்க்க