அளுந்தூா், மணிகண்டத்தில் ஜூன் 10 இல் மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் அளுந்தூா், மணிகண்டம் பகுதிகளில் ஜூன் 10 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
அளுந்தூா் துணை மின்நிலையப் பராமரிப்பு பணிகளால் அளுந்தூா், சேதுராப்பட்டி, பாத்திமாநகா், சூறாவளிபட்டி, குஜிலியம்பட்டி, யாகப்புடையான்பட்டி, கொட்டப்பட்டு, குமரப்பட்டி, களிமங்கலம், குன்னத்தூா், பிடாரம்பட்டி, சூரக்குடிபட்டி, இ. மேட்டுப்பட்டி, மேலபச்சக்குடி, அரசுக் கல்லூரி, அரசுப் பொறியியல் கல்லூரி, ஐஐஐடி, பள்ளப்பட்டி இதேபோல, மணிகண்டம் துணை மின்நிலைய பராமரிப்பு பணியால் தென்றல் நகா், முடிகண்டம், நேருஜி நகா், மலா் நகா், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூா், தீரன்மாநகா், மாத்தூா், எசனப்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.