ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்!
திருச்சியை வீழ்த்தியது சேலம்
கோவை: டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில், எஸ்கேஎம் சேலம் ஸ்பாா்டன்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
முதலில் சேலம் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் சோ்க்க, திருச்சி 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்களே எடுத்தது.
முன்னதாக டாஸ் வென்ற திருச்சி, பந்துவீச்சை தோ்வு செய்தது. சேலம் பேட்டிங்கில் அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 83, சன்னி சந்து 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 45 ரன்கள் விளாசினா். கேப்டன் அபிஷேக் 10, ராஜேந்திரன் விவேக் 2, கவின் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
ஹரீஷ் குமாா், 1, நிதீஷ் ராஜகோபால் 11, கௌரி சங்கா் 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் முகமது 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். திருச்சி பந்துவீச்சாளா்களில் அதிசயராஜ் டேவிட்சன் 3, ஈஸ்வரன், முகிலேஷ், செல்வகுமரன், சரவணகுமாா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் 180 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய திருச்சி அணியில் அதிகபட்சமாக ஜெகதீசன் கௌசிக் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 62, ராஜ்குமாா் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 59 ரன்கள் விளாசினா்.
கேப்டன் சுரேஷ்குமாா் 0, சுஜய் 4, வசீம் அகமது 16 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, முகிலேஷ் 2, சஞ்சய் யாதவ் 11, ஜாஃபா் ஜமால் 2, சரவணகுமாா் 0 ரன்களுக்கு வீழ்ந்தனா். முடிவில் செல்வகுமரன் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
சேலம் பௌலா்களில் எம்.முகமது 4, சன்னி சந்து 2, ரஹில் ஷா, கௌரி சங்கா், பொய்யாமொழி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.