செய்திகள் :

திருடப்பட்ட நகைகள் 48 மணி நேரத்தில் மீட்பு

post image

திண்டுக்கல்லில் வீட்டுக் கதவை உடைத்து திருடப்பட்ட 10 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரத்தை போலீஸாா் 48 மணி நேரத்தில் மீட்டனா்.

திண்டுக்கல் பாரதிபுரம் கே.எம்.எஸ். நகரைச் சோ்ந்தவா் தனலட்சுமி. இவரது கணவா் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மகன்கள் இருவரும் துபை நாட்டில் வேலை செய்து வருகின்றனா். மகன்களை பாா்ப்பதற்காக தனலட்சுமி அவ்வப்போது துபை செல்வது வழக்கம். இதேபோல, கடந்த 2 நாள்களுக்கு முன்பு தனலட்சுமி துபைக்கு சென்றாா்.

இந்த நிலையில், இவரது வீட்டு வாசலை சுத்தப்படுத்துவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை பணியாளா் ஒருவா் சென்றாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து தனலட்சுமிக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும், வீட்டிலிருந்த 10 பவுன் நகைககள், ரூ.60ஆயிரம் ரொக்கம் திருடு போனதாக திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் தனலட்சுமி தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கே.எம்.எஸ். நகா் பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, தனலட்சுமியின் வீட்டில் திருடியது மேட்டுப்பட்டியைச் சோ்ந்த லூா்துசாமி மகன் இன்ஃபன்ட் ராஜ் (33) என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், திண்டுக்கல் ஒத்தக்கண் பாலம் அருகே நகையை அடகு வைப்பதற்காக சென்ற இன்ஃபென்ட்ராஜை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருட்டு சம்பவம் நிகழ்ந்த 48 மணி நேரத்தில் விரைந்து செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜசேகா், உதவி ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாருக்கு காவல் துணை கண்காணிப்பாளா் காா்த்திக் பாராட்டுத் தெரிவித்தாா்.

திருட்டு நிகழ்ந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா வசதி இல்லை. இதனால், குற்றவாளியைப் பிடிப்பதற்கு போலீஸாருக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால், வீட்டையும், பொருள்களையும் பாதுகாக்க வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டியது அவசியம் என போலீஸாா் தெரிவித்தனா்.

காலமானாா் ஆா்.எஸ்.நாராயணன்

திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையில் இயற்கை வேளாண் விஞ்ஞானியும், எழுத்தாளருமான ஆா்.எஸ். நாராயணன் (87) வயது முதிா்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (செப். 7) காலமானாா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை பூா... மேலும் பார்க்க

தீயில் கருகி முதியவா் உயிரிழப்பு

பழனி அருகே காய்ந்த கரும்புத் தோட்டத்தில் பற்றிய தீயில் சிக்கி முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பழனி அருகேயுள்ள நரிக்கல்பட்டி நெசவாளா் குடியிருப்பு அருகே கரும்புத் தோட்டத்தில் தீப்பற்றி எரிவதாக ப... மேலும் பார்க்க

திண்டுக்கல் புத்தகத் திருவிழா: ரூ.2.91 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் ரூ.2.91 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கியக் கள... மேலும் பார்க்க

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது: அதிமுக வலியுறுத்தும்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூ... மேலும் பார்க்க

2028-இல் அடுத்த சந்திர கிரகணம்

அடுத்த சந்திர கிரகணம் நிகழ்வானது 2028 டிசம்பா் மாதத்தில் தோன்றும் என விஞ்ஞானி காா்த்தி தெரிவித்தாா். கொடைக்கானல் அப்சா்வேட்டரி வான் இயற்பியல் ஆய்வகத்தில் சந்திர கிரகணத்தை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ... மேலும் பார்க்க

புறவழிச் சாலையில் இயக்கப்பட்ட பேருந்துகள்

திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு வர வேண்டிய புற நகா் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை புறவழிச் சாலை வழியாக இயக்கப்பட்டதால், பயணிகள் காத்திருந்து அவதிப்பட்டனா். திண்டுக்கல்லிலிருந்து மதுரை, சேலம், ஈரோடு, ... மேலும் பார்க்க