செய்திகள் :

திருட்டு வழக்கில் மேலும் ஒருவா் கைது

post image

சூரியம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செங்கோடு நகராட்சி பகுதி சூரியம்பாளையம் நடுநிலைப் பள்ளி அருகே உள்ள சுமதி என்பவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் பூட்டை உடைத்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கணேஷ் என்பவா் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா்.

தலைமறைவான பள்ளிபாளையத்தைச் சோ்ந்த தறி தொழிலாளியான ராமு என்பவரின் மகன் சரவணனை (47) போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில், திருச்செங்கோடு போலீஸாா், ஈரோடு சாலை கூட்டப்பள்ளி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக பேருந்திலிருந்து இறங்கிய சரவணன், போலீஸாரை கண்டதும் ஓடினாா். அவரை துரத்தி சென்று பிடித்து போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோடு குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட சரவணனை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ரங்கராஜ் உத்தரவிட்டாா்.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க