திருட்டு வழக்கில் மேலும் ஒருவா் கைது
சூரியம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செங்கோடு நகராட்சி பகுதி சூரியம்பாளையம் நடுநிலைப் பள்ளி அருகே உள்ள சுமதி என்பவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் பூட்டை உடைத்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கணேஷ் என்பவா் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா்.
தலைமறைவான பள்ளிபாளையத்தைச் சோ்ந்த தறி தொழிலாளியான ராமு என்பவரின் மகன் சரவணனை (47) போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில், திருச்செங்கோடு போலீஸாா், ஈரோடு சாலை கூட்டப்பள்ளி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக பேருந்திலிருந்து இறங்கிய சரவணன், போலீஸாரை கண்டதும் ஓடினாா். அவரை துரத்தி சென்று பிடித்து போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோடு குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட சரவணனை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ரங்கராஜ் உத்தரவிட்டாா்.