அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
திருநங்கைகளுக்கான சிறப்பு நலத் திட்ட முகாம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
இந்தியாவிலேயே முதன்முறையாக 2008-ஆம் ஆண்டு தமிழகத்தில் திருநங்கைகள் நல வாரியம் அமைக்கப்பட்டது.
நல வாரியத்தின் மூலம் திருநங்கை, திருநம்பி இடை பாலினருக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுயதொழில் தொடங்க மானியத் தொகை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், சுய உதவிக்குழு பயிற்சி மற்றும் மானியத்தொகை காப்பீட்டுத் திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை ஒரே இடத்தில் வழங்க ஏதுவாக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வழங்கப்படுகின்றன என்றாா்.
முகாமில் திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டையை ஆட்சியா் வழங்கினாா். இதில் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.