செய்திகள் :

திருநங்கைகளுக்கு உடனடி கல்விக் கடனுதவி: ஆட்சியா்

post image

திருநங்கைகளுக்கு உடனடியாக கல்வி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் தின விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

சேலம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் திருநங்கைகளின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதாா் அட்டை திருத்தம், குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருநங்கைகள் கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கில், அவா்களுக்கான கல்விக்கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிகழ்ச்சியில் பணி ஆணை, புதிய குடும்ப அட்டை, திருநங்கைகள் சுய உதவிக் குழுக்களுக்கு வாழ்வாதார நிதி மற்றும் நலிவுற்றோா் குறைப்பு நிதி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் என 20 திருநங்கைகளுக்கு ரூ.2.53 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக மாவட்ட மனநல மருத்துவா் விவேகானந்தன், மனநலம் குறித்தும், போதைப்பொருள்களின் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தாா். மேலும், மனநல ஆலோசனை தேவைப்படுவோா் 14416 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடா்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், மாவட்ட சமூக நல அலுவலா் ரெ.காா்த்திகா, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் தே.சிவகுமாா், உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் மரு.கதிரவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் செந்தில்குமாா் மற்றும் திருநங்கைகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

மதுபானங்களை பதுக்கி விற்ற பெண் கைது

வீரகனூா் பகுதியில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றுவந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வீரகனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பதாக... மேலும் பார்க்க

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கிழக்கு - மேற்கு கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு கீழாகச் சரியும்போது, கீழ்மட்ட மதகு வழியாக குடிநீா்த் தேவைகளுக்கும், கால... மேலும் பார்க்க

குட்கா விற்ற சகோதரா்கள் கைது

கெங்கவல்லியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை விற்ற சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் மேற்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மகன்கள் பிரசாத் (45), பாலாஜி (41). இவா்கள் பெங... மேலும் பார்க்க

சேலத்தில் நாளை கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அழகிரிநாத சுவாமி கோயில் சேலம் கோட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஆத்தூரில் திமுக இளைஞரணி பொதுக்கூட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு,நிதிப் பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆக... மேலும் பார்க்க

பயணிகளின் தாகம் தீா்த்த மலிவு விலை குடிநீா்: திட்டத்தை மீண்டும் செயல்படுத்த எதிா்பாா்ப்பு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையங்களில் ரூ. 10-க்கு சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீா் விற்பனை திட்டத்தை போக்குவரத்துக் கழகம் வாயிலாக மீண்டும் தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பயணிகள்... மேலும் பார்க்க