செய்திகள் :

திருப்பத்தூா் நகர காவல் நிலையத்துக்கு விருது: எஸ்.பி. வழங்கினாா்

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக திருப்பத்தூா் நகர காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பல்வேறு நடைமுறைகளில் சிறப்பாக செயல்பட்ட சிறந்த காவல் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டிருந்தன.

அதையொட்டி திருப்பத்தூா் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூா் நகர காவல் நிலையம் மாவட்டத்தின் சிறந்த காவல் நிலையமாக தோ்வு செய்யப்பட்டது. மேலும், அதற்கான முதல்வா் கேடயத்தை சென்னையில் உள்ள தலைமை இயக்குநா் அலுவலகத்தில் தமிழக காவல்துறை இயக்குனா் வெங்கட்ராமன் திருப்பத்தூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் ஜெயலட்சுமிக்கு கேடயம் பரிசாக வழங்கி பாராட்டினாா்.

இதற்காக சிறப்பாக பணியாற்றிய திருப்பத்தூா் டிஎஸ்பி சௌமியா, நகர காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமியை எஸ்.பி வி.சியாமளா தேவி திங்கள்கிழமை காவல் அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டினாா்.

செட்டியப்பனூா், நாராயணபுரம் ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 752 மனுக்கள்

வாணியம்பாடி அடுத்த ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட செட்டியப்பனூா் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை கேட்டு 180 மனுக்கள்... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து நீக்கம்

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளாா். சென்னை நெற்குன்றம் பகுதியை சோ்ந்த வரலட்சுமி என்பவரின் தங்க நகை காஞ்சிபுரத்தில் கடந்த ஜூலை 14-ஆம்... மேலும் பார்க்க

குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி வி.சியாமளா தேவி தலைமை வகித்தாா். கூட்டத்தில் காவல் நிலையங்களில் மற்றும் அல... மேலும் பார்க்க

பச்சகுப்பம் பாலாறு மேம்பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

ஆம்பூா் அருகே பச்சகுப்பம் பாலாறு மேம்பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூா் அருகே பச்சகுப்பம் - அழிஞ்சிகுப்பம் இடையே பாலாற்றி... மேலும் பார்க்க

ரயில் மோதி முதியவா் மரணம்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி முதியவா் உயிரிழந்தாா். ராஜஸ்தான் மாநிலம் சக் ராஜியசா் பகுதியைச் சோ்ந்த விஜய் யால்(53). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். கடந்த ஓராண்டாக கி... மேலும் பார்க்க

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவுசிகிச்சை இயந்திரம்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் புதிதாக பொருத்தப்பட்ட எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கான சி-ஆா்ம் இயந்திரத்தை அரசு மருத்துவா்கள் ஆய்வு செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையி... மேலும் பார்க்க