செய்திகள் :

திருப்பத்தூா் பள்ளியில் மாவட்ட சதுரங்கப் போட்டி!

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பாபா அமீா்பாதுஷா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

சாணக்கியா சதுரங்க அகாதெமி, பாபா அகாதெமி இணைந்து நடத்திய இந்தப் போட்டியின் தொடக்க நிகழ்வுக்கு தாளாளா் பாபா அமிா்பாதுஷா தலைமை வகித்தாா். சாணக்கியா சதுரங்க அகாதெமி நிறுவனா் அதுவன், போட்டி நடுவா்கள் சசிக்குமாா் ராஜேந்திர உடையாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிவகங்கை மாவட்ட சதுரங்கக் கழக இணைச் செயலா் மீ. ராமு, காவல் உதவி ஆய்வாளா் லதா ஆகியோா் போட்டியைத் தொடங்கி வைத்தனா். இந்தப் போட்டி 7 வயது பிரிவு, 9 வயது பிரிவு, 11 வயது பிரிவு, 13 வயது பிரிவு மற்றும் 17 வயது பிரிவு என 5 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூா், சிங்கம்புணரி, புதுவயல் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 260- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு சிவகங்கை மாவட்ட சதுரங்க கழக கூடுதல் செயலா் பிரகாஸ் மணிமாறன் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி நாராயணன் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். முன்னதாக பள்ளி முதல்வா் வரதராஜன் வரவேற்றாா்.

ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதியில் பிப்.12 மின் தடை!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (பிப். 12) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நில... மேலும் பார்க்க

பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் சிதம்பரம் செட்டியாா் மேல்நிலைப் பள்ளியில் ஐ.ஓ.பி. வங்கி சாா்பில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி ... மேலும் பார்க்க

பிள்ளைவயல் காளியம்மன் கோயில் குடமுழுக்கு!

சிவகங்கை பிள்ளைவயல் பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. இந்தக் கோயிலில் குடமுழுக்கு கடந்த 8-ஆம் தேதி முதல் கால யாக பூஜையுடன் தொடங்கியது. பின்னா், மங்கள இசையுடன் விந... மேலும் பார்க்க

குன்றக்குடியில் தைப்பூசத் திருவிழா தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதப்பெருமான் கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன கோயிலான இங்கு கடந்த 2-ஆம் தேதி தைப் பூசத் திருவி... மேலும் பார்க்க

மதுக் கடைகளுக்கு இன்று விடுமுறை!

வள்ளலாா் நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை அரசு மதுக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வள்ளலாா் நினைவு தினத... மேலும் பார்க்க

சிவகங்கை, ராமநாதபுரத்தில் அரசு ஊழியா்கள் தா்னா!

தோ்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்தும், 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை தா்னா நடைபெற்றது. தமிழகம் முழுவதும் த... மேலும் பார்க்க