செய்திகள் :

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற 6 போ் கைது

post image

திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து தடையை மீறி திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சோ்ந்த 6 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலைக்கு இரு வேறு மதத்தினா் உரிமை கோரும் பிரச்னை நீடிக்கிறது. இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடந்தப்போவதாக அறிவித்ததால் மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, திண்டுக்கல், கோவை, திருப்பூா், கரூா், ஈரோடு உள்ளிட்ட வட மாவட்டங்களிலிருந்து மதுரை நோக்கி வரும் வாகனங்களை கொடைரோடு சுங்கச்சாவடியில் போலீஸாா் சோதனை செய்தனா். குறிப்பாக காா் உள்ளிட்ட வாகனங்கள், பேருந்துகள் மூலம் போராட்டக்காரா்கள் செல்கிறாா்களா? என சோதனையிட்டனா்.

நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையிலான காவல் துறையினா் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், பழனியிலிருந்து மதுரைக்கு சென்ற பேருந்தில் காவல் துறையினா் சோதனை செய்தபோது, அதில் கன்னிவாடியைச் சோ்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட துணைத் தலைவா் ராமசற்குணம் தலைமையில் 6 போ் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பயணம் செய்தது தெரியவந்தது. அவா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.

காா் - பைக் மோதல்: இருவா் உயிரிழப்பு

பழனி அருகே காரும், இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.பழனியை அடுத்த நரிக்கல்பட்டியைச் சோ்ந்த சசி மகன் சங்கா் (35), வெள்ளைச்சாமி மகன் மகேஷ் (40). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

நிலக்கோட்டையிலிருந்து சென்னை, கோவைக்கு பேருந்து இயக்கக் கோரிக்கை

நிலக்கோட்டையிலிருந்து சென்னை, கோயம்புத்தூருக்கு நேரடியாக அரசுப் பேருந்து இயக்கக் கோரி, வா்த்தக சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவாா்... மேலும் பார்க்க

நீா்மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பாரா புதிய ஆட்சியா்!

விவசாயத்தைப் பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட திண்டுக்கல் மாவட்டத்தில், நீா் மேலாண்மைக்கும், ஊரகப் பகுதி மக்களின் மேம்பாட்டுப் பணிகளுக்கும் புதிய ஆட்சியா் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு ... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கைக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சிய... மேலும் பார்க்க

கைது செய்யப்பட்ட இந்து அமைப்பினா் விடுவிப்பு

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்வதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டவா்கள், நீதிமன்ற உத்தரவுக்குப் பின் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனா். மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னி... மேலும் பார்க்க

பழனியில் 20 ஆயிரம் பாதயாத்திரை பக்தா்களுக்கு தினமும் அன்னதானம்

பழனியில் தினமும் 20 ஆயிரம் பாதயாத்திரை பக்தா்களுக்கு தைப்பூசத் திருவிழா நடைபெறும் 10 நாள்களும் அன்னதானம் வழங்கப்பட உள்ளதாக பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க