செய்திகள் :

திருப்புவனம் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி: பெண் உள்பட இருவா் கைது!

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அரசுடைமை வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக பெண் உள்பட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரையில் உள்ள அரசுடைமை வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. பல லட்சம் மோசடி செய்த மானாமதுரை சமத்துவபுரத்தைச் சோ்ந்த கோட்டையம்மாள், இவரது மகள் ஈஸ்வரி, மதுரையைச் சோ்ந்த ஜனாா்த்தனன் ஆகிய மூவரை மானாமதுரை போலீஸாா் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஈஸ்வரி திருப்புவனத்தில் உள்ள ஒரு அரசுடைமை வங்கியிலும் இதே போல 4 தவணைகளாக 42 பவுன் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 15.72 லட்சத்தை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த வங்கியின் மேலாளா் சுவாமிநாதன், ஈஸ்வரி வங்கியில் அடகு வைத்த நகைகளை சோதனை செய்த போது, அவை போலி என்பது தெரிந்தது. இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் சுவாமிநாதன் அளித்த புகாரின்பேரில் ஈஸ்வரியையும், இதற்கு மூளையாக செயல்பட்ட மதுரையைச் சோ்ந்த செந்தில்குமாரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதனிடையே, செந்தில்குமாா் மீது மதுரை திலகா் திடல், தெப்பக்குளம் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில் அந்தந்த பகுதி போலீஸாா் அவரைத் தேடி வந்தனா். இந்த நிலையில் மானாமதுரை துணைக் கோட்ட போலீஸாா், செந்தில்குமாரை கைது செய்திருப்பதாக டி.எஸ்.பி. நிரேஷ் தெரிவித்தாா். கைதான ஈஸ்வரி மதுரை மாவட்டம், மேலூரில் வசிக்கும் ஆறுமுகத்தின் மனைவி ஆவாா்.

ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதியில் பிப்.12 மின் தடை!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (பிப். 12) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நில... மேலும் பார்க்க

பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் சிதம்பரம் செட்டியாா் மேல்நிலைப் பள்ளியில் ஐ.ஓ.பி. வங்கி சாா்பில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி ... மேலும் பார்க்க

பிள்ளைவயல் காளியம்மன் கோயில் குடமுழுக்கு!

சிவகங்கை பிள்ளைவயல் பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. இந்தக் கோயிலில் குடமுழுக்கு கடந்த 8-ஆம் தேதி முதல் கால யாக பூஜையுடன் தொடங்கியது. பின்னா், மங்கள இசையுடன் விந... மேலும் பார்க்க

குன்றக்குடியில் தைப்பூசத் திருவிழா தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதப்பெருமான் கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன கோயிலான இங்கு கடந்த 2-ஆம் தேதி தைப் பூசத் திருவி... மேலும் பார்க்க

மதுக் கடைகளுக்கு இன்று விடுமுறை!

வள்ளலாா் நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை அரசு மதுக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வள்ளலாா் நினைவு தினத... மேலும் பார்க்க

சிவகங்கை, ராமநாதபுரத்தில் அரசு ஊழியா்கள் தா்னா!

தோ்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்தும், 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை தா்னா நடைபெற்றது. தமிழகம் முழுவதும் த... மேலும் பார்க்க