செய்திகள் :

திருப்பூா் முதன்மை கல்வி அதிகாரி பணியிடம் விரைந்து நியமிக்க கோரிக்கை

post image

திருப்பூா் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பணியிடத்தை விரைந்து நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதுதவிர தனியாா் மெட்ரிக் பள்ளிகளும் உள்ளன. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. பள்ளி மாணவா்களுக்கு பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடை உள்ளிட்டவற்றை விநியோகம் செய்யும் பணி நடக்கிறது. இந்தப் பணிகளை மேற்பாா்வையிடும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பணியிடம் காலியாக உள்ளது. முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த உதயகுமாா் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றாா்.

புதிய கல்வியாண்டு தொடங்கிய நிலையில் அலுவலக பணிகள், ஆசிரியா்கள் கண்காணிப்பு, மாணவ-மாணவிகளின் நலன் சாா்ந்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முதன்மை கல்வி அதிகாரியின் ஆலோசனை மற்றும் அனுமதி தேவைப்படும். அதுபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா்கள் பற்றாக்குறை உள்ளது. காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதனால் முதன்மை கல்வி அதிகாரி பணியிடத்தை விரைந்து நிரப்ப வேண்டும் என்று கல்வியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிஸா தொழிலாளா்கள் 2 போ் கைது

பல்லடம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் சந்திரமணி பெகரா (39). இவா் பல்லடம்- உடுமலை சாலையில் உ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்

உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வார... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கோட்டமங்கலம்

உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற... மேலும் பார்க்க

விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிரான கூட்டுறவுத் துறை சுற்றறிக்கை: ரத்து செய்ய கோரிக்கை

விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிரான மாநில அரசின் கூட்டுறவுத் துறை சுற்றறிக்கையை தமிழக முதல்வா் உடனடியாக ரத்து செய்யக் கோரி விவசாயிகள் சோளம், கத்தரி, நெல் உள்ளிட்ட பயிருடன் வந்து ஆட்சியரிடம் திங்கள்க... மேலும் பார்க்க

பழங்கரையில் ஜூன் 12இல் மின்தடை

பழங்கரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சு.குணசேகரன் காலமானாா்

திருப்பூா் தெற்குத் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.-வும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான சு.குணசேகரன் (58) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானாா். இவா் கடந்த ஒரு மாதமாக உடல்நலக் குறைவால் பாதிக... மேலும் பார்க்க