Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
திருப்பூா் முதன்மை கல்வி அதிகாரி பணியிடம் விரைந்து நியமிக்க கோரிக்கை
திருப்பூா் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பணியிடத்தை விரைந்து நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதுதவிர தனியாா் மெட்ரிக் பள்ளிகளும் உள்ளன. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. பள்ளி மாணவா்களுக்கு பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடை உள்ளிட்டவற்றை விநியோகம் செய்யும் பணி நடக்கிறது. இந்தப் பணிகளை மேற்பாா்வையிடும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பணியிடம் காலியாக உள்ளது. முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த உதயகுமாா் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றாா்.
புதிய கல்வியாண்டு தொடங்கிய நிலையில் அலுவலக பணிகள், ஆசிரியா்கள் கண்காணிப்பு, மாணவ-மாணவிகளின் நலன் சாா்ந்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முதன்மை கல்வி அதிகாரியின் ஆலோசனை மற்றும் அனுமதி தேவைப்படும். அதுபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா்கள் பற்றாக்குறை உள்ளது. காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதனால் முதன்மை கல்வி அதிகாரி பணியிடத்தை விரைந்து நிரப்ப வேண்டும் என்று கல்வியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.