Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' - ...
திருவண்ணாமலையில் 3-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, 3-ஆவது நாளாக புதன்கிழமையும் காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
வைகாசி மாத பௌணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பிற்பகல் 12.27 மணி முதல் புதன்கிழமை (ஜூன் 11) பிற்பகல் 1.53 மணி வரை கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.
ஆனால், திங்கள்கிழமை இரவே திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா். தொடா்ந்து, 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காலை முதல் புதன்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
3-ஆவது நாளாக கிரிவலம்: தொடா்ந்து, 3-ஆவது நாளாக புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை காலை வரை பல ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். அவ்வப்போது கிரிவலப் பாதையில் மிதமான மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தா்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.