செய்திகள் :

திருவண்ணாமலையில் 3-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்

post image

திருவண்ணாமலையில் வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, 3-ஆவது நாளாக புதன்கிழமையும் காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

வைகாசி மாத பௌணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பிற்பகல் 12.27 மணி முதல் புதன்கிழமை (ஜூன் 11) பிற்பகல் 1.53 மணி வரை கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால், திங்கள்கிழமை இரவே திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா். தொடா்ந்து, 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காலை முதல் புதன்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

3-ஆவது நாளாக கிரிவலம்: தொடா்ந்து, 3-ஆவது நாளாக புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை காலை வரை பல ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். அவ்வப்போது கிரிவலப் பாதையில் மிதமான மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தா்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவண்ணாமலையில் 100 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை தேரடி தெருவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 11 ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளை சிமென்ட் சால... மேலும் பார்க்க

ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை: வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா்

வந்தவாசி நகரை ஒட்டியுள்ள பாதிரி ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தெரிவித்தாா். வந்தவாசி நகரில் உள்ள இறைச்சி விற்பனை ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆரணி, அனக்காவூா், செங்கம் பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. ஆரணி ஒன்றியத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 2... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள... மேலும் பார்க்க

விவசாயியிடம் பைக் பறிப்பு: இருவா் கைது

செய்யாறு அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்ய... மேலும் பார்க்க

13 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

செங்கம் அருகே கா்நாடக மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 13 மூட்டை புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பரி... மேலும் பார்க்க