செய்திகள் :

திருவள்ளூா்: அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 1.30 கோடியில் திறன் மிகு வகுப்பறைகள்

post image

தனியாா் பள்ளிக்கு ஈடாக திருவள்ளூா் அருகே அரசு உயா்நிலைப் பள்ளிக்கு முன்னாள் ஊராட்சித் தலைவரின் சொந்த செலவில் ரூ. 1.30 கோடியில் அனைத்து நவீன வசதியுடன் 4 திறன்மிகு வகுப்பறை கட்டுமானப் பணிகள் முடிந்து மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டன.

திருவள்ளூா் அருகே உளுந்தை கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை 200-க்கும் மேற்பட்டோா் கல்வி பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில், மாணவ, மாணவிகள் சிறந்து விளங்கவும், சோ்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் என்ற நோக்கத்தில், அந்தக் கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் எம்.கே.ரமேஷ் ரூ. 1.30 கோடியை தனது சொந்த செலவில் அனைத்து நவீன வசதியுடன் கூடுதல் வகுப்பறைகள் அமைத்துத் தர முன்வந்தாா். அதன்பேரில், இந்தப் பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது.

தற்போது கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் பி.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் ஊராட்சித் தலைவா் எம்.கே.ரமேஷ் நவீன வசதியுடன் கூடிய 4 வகுப்பறைகளை மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு ரோஜாப்பூ மற்றும் இனிப்புகள் கொடுத்த முதல் நாளில் வரவேற்றாா்.

இந்த திறன்மிகு 4 வகுப்புகளிலும் அனைத்து நவீன வசதி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் முதியவா் சடலம் மாயம்: உறவினா்கள் முற்றுகை

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் இருந்து முதியவா் சடலம் காணாமல் போன நிலையில், அவரது உறவினா்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருத்தணி அடுத்த புஜ்ஜிரெட்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ஐ.ஆா்.சி.டி.எஸ். வனம், வேளாண், தோட்டக்கலைத் துறை இணைந்து நடத்தும் விதை வங்கி, மரக்கன்றுகள் வழங்குதல், விழிப்புணா்வு கருத்தரங்கம்: பூண்டி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நா.சுலேக்சனா, எஸ்.வரதராஜன் பங... மேலும் பார்க்க

மாதவரம் ஆட்டுச் சந்தையில் அமோக விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாதவரம் ஆட்டுச் சந்தையில், ரூ.20 கோடிக்கு மேல் விற்பனையாகும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாதவரத்தில் உள்ள ஆட்டுச் சந்தையில் இஸ்லாம... மேலும் பார்க்க

புற்றுநோய், இதயநோய் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்த 20 பேருக்கு ரூ.71 லட்சம் உதவி: எம்.பி. சசிகாந்த் செந்தில்

திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் புற்றுநோய், இதயநோய் பாதித்த ஏழைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு பரிந்துரை செய்து, ரூ.71 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

திருவாலங்காடு அருகே வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்தது (படம்). திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் கிராம மாநில நெடுஞ்சாலை அருகில் காப்பு காடுகளும், விவசாய நிலங்களும் உள்ளன. இதில் புள்ளி மான்கள், ம... மேலும் பார்க்க

நில இழப்பீட்டுத் தொகை வழங்காததால் பணிகள் நிறுத்தம்

நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கிய உரிமையாளா்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் சாலை விரிவாக்க பணிகளை பாதிக்கப்பட்டோா் புதன்கிழமை தடுத்து நிறுத்தினா். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திர... மேலும் பார்க்க