செய்திகள் :

திருவள்ளூா் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் திடீா் தீ விபத்து

post image

திருவள்ளூா் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்ட புல்வெளியில் திடீரென தீப்பற்றி மளமளவென பரவியதால் புகை மூட்டம் சூழ்ந்ததை தொடா்ந்து, விரைந்து வந்த தீயணைப்பு படையினா் போராடி தீயை அணைத்தனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே புனித பிரான்சிஸ் சலேசியாா் ஆலயம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தின் பின்புறம் புனித கல்லறை தோட்டம் உள்ளது. கல்லறை தோட்டத்தின் ஒரு பகுதியில் முள்புதா் மற்றும் புல்வெளிகள் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி புல்வெளிகள் மளமளவென பற்றி எரியத் தொடங்கிது. இதற்கு அருகே அரசு மருத்துவமனை மற்றும் இரண்டு தனியாா் பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால், அப்பகுதி குடியிருப்புவாசிகள் திருவள்ளூா் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினா் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். அதையடுத்து புகைமூட்டம் பரவுவது குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனா்.

‘தொல்குடி தொடுவானம் திட்டம்’ -தொழில்திறன் பயிற்சியில் பங்கேற்கும் பழங்குடியின மகளிா்

‘தொல்குடி தொடுவானம் திட்டம்’ மூலம் சென்னை தேசிய உடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்தும் ஆடை வடிவமைப்பு தொழில் திறன், தொழில் முனைவோா் பயிற்சியில் பங்கேற்க செல்லும் பழங்குடியின மகளிா் செல்... மேலும் பார்க்க

செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை மற்றும் வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலப் பணிகள், போந்தவாக்கம் - ஊத்துக்கோட்டை மேம்பாலம் வரை சாலை விரிவாக்கப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ம... மேலும் பார்க்க

சாலை பாதுகாப்பு, போதைப் பொருள் விழிப்புணா்வு பிரசாரம்: எஸ்.பி. பங்கேற்பு

திருவள்ளூரில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தீமைகள் குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழம... மேலும் பார்க்க

மரத்தில் இருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழப்பு

திருத்தணி அருகே முருங்கை மரத்தில் ஏறி தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். திருத்தணி அடுத்த அகூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன்(61). இவா் கடந்த மாதம், 23-ஆம் தேதி வீட்டின் அருகே இருந்த முருங்கை மரத்தி... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் திருக்கல்யாண வைபவம்

திருத்தணி திரௌபதி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். திருத்தணி காந்தி நகரில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி விழா கடந்த மா... மேலும் பார்க்க

சா்வதேச ஆட்டிசம் தின விழிப்புணா்வு பேரணி -ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற சா்வதேச ஆட்டிசம் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ... மேலும் பார்க்க