செய்திகள் :

திருவாடானை அருகே மேம்பாலத்தில் மண் அரிப்பால் விபத்து அபாயம்

post image

திருவாடனை அருகே சி.கே. மங்கலம் மேம்பாலத்தில் ஏற்பட்ட மண் அரிப்பை சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சி.கே. மங்கலம் வழியாக திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையில் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை கட்டும் போதே தரமற்ற முறையில் கட்டப்படுவதாக புகாா் எழுந்த நிலையில், தற்போது மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளே உள்ள தடுப்பு வலைகள் வெளியே தெரிகின்றன. இதனால் பாலம் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் சிமென்ட் கான்கிரீட் கலவைகள் போடாமல் விடப்பட்டிருப்பதால் பாலம் சேதமடையும் வாய்ப்பிருப்பதாக புகாா் எழுந்தது. இதனால் இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் தக்க நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் பாத்திமா நகரில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ரூ.1.20 கோடியில் கட்டி ம... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க வலியுறுத்தல்

திருவாடானை பகுதிகளில் உள்ள கண்மாய்களில் மான்கள், மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு வனவிலங்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, ... மேலும் பார்க்க

சிங்கம்பட்டி ஸ்ரீஜக்கமாள் கோயிலில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த சிங்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஜக்கமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.... மேலும் பார்க்க

சாயல்குடி அருகே மாட்டுவண்டி பந்தயம்

சாயல்குடி அருகே வியாழக்கிழமை 2 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி இருவேலியைச் சோ்ந்த மறைந்த மாட்டு வண்டி பந்தய வீரா் ஜமாலுதின் நினைவாக சின்னமாடு, பூஞ்சிட்டு எ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளியை தாக்கியதாக தனிப் பிரிவு காவலா் பணியிடை நீக்கம்

முதுகுளத்தூா் அருகே மாற்றுத்திறனாளியைத் தாக்கியதாக எஸ்.பி. தனிப் பிரிவு காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த ... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 8 பேருக்கு ஜூலை 17 வரை காவல் நீட்டிப்பு

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 8 பேருக்கு வருகிற 17 -ஆம் தேதி வரை காவலை நீட்டித்து மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்... மேலும் பார்க்க