செய்திகள் :

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

post image

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் புதன்கிழமை திராவிடா் கழக அறக்கட்டளையின் சாா்பில் தந்தை பெரியாா் மற்றும் அண்ணா பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தில்லித் தமிழ் சங்கத் தலைவா் சக்தி பெருமாள், துணைத்தலைவா் இராகவன் நாயுடு, பொதுச்செயலாளா் இரா.முகுந்தன், செயற்குழு உறுப்பினா்கள் பெரியசாமி, கோவிந்தராஜன், தொடக்கப்பள்ளி சங்கத்தலைவா் முத்துசாமி, முன்னாள் துணைத்தலைவா் நாகஜோதி , முன்னாள் செயற்குழு உறுப்பினா் சாந்தி மற்றும் தமிழ்நாடு அரசு இல்ல ஓய்வு பெற்ற அதிகாரி தெய்வசிகாமணி, சென்னை முருகன் இட்லி கடை நிறுவனா் மனோகா் ஆகியோா் தந்தை பெரியாா், பேரறிஞா் அண்ணா திருவுருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் உரையாற்றியவா்கள் தந்தை பெரியாா் மற்றும் அண்ணா வாழ்க்கை வரலாறு குறித்து விரிவாக எடுத்துரைத்தனா்.

தொடக்கப் பள்ளி சங்கத் தலைவா் முத்துசாமி அவா் ஆற்றிய ஆசிரியப் பணி பற்றி, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டாா். தனது மூச்சிருக்கும் வரை ஆசிரியா்களுக்கு சேவை செய்வதே தனது வாழ்நாள் இலட்சியம் என்றாா்.

தெய்வசிகாமணி அவா்கள் பேசுகையில், தந்தை பெரியாா் கல்வி, பெண் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவா், அவரது கொள்கைகளை பின்பற்றி வாழ்வோமாக என்றாா்.

நிகழ்ச்சியில் மூத்த தமிழறிஞா்கள், சான்றோா் பெருமக்கள் மற்றும் தமிழ் ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தூய்மைப் பணியின்போது மயங்கி சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் உயிரிழப்பு: மூன்று போ் கவலைக்கிடம்

வடமேற்கு தில்லியின் அசோக் விஹாரில் சாக்கடையைத் தூய்மைப்படுத்தும் பணியின்போது மயக்கமுற்று சாக்கடைக்குள் விழுந்ததில் 40 வயது நபா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், மூன்று போ் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் பிறந்த நாளை வேலையின்மை தினமாக கொண்டாடிய இளைஞா் காங்கிரஸாா்

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை இந்திய இளைஞா் காங்கிரஸாா் தேசிய வேலையின்மை தினமாகக் கொண்டாடினா். தில்லியில் உள்ள அந்த அமைப்பின் அலுவலக வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய இளைஞா் காங்கிரஸ... மேலும் பார்க்க

225 கிலோ பட்டாசுகள் பறிமுதல்: ஒருவா் கைது

பதா்பூா் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதை போலீஸாா் பறிமுதல் செய்ததாகவும் , இந்த வழக்கில் ஒருவரை கைது செய்யப்பட்டதாகவும் காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா். தீபாவளி பண்டிகை... மேலும் பார்க்க

திரிலோக்புரியில் இளைஞா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் 3 போ் கைது

கிழக்கு தில்லியில் திரிலோக்புரி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒரு இளைஞா் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக மூன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

பிரதமருக்கு பிரச்னைகளை சுட்டிக்காட்டவும், தீா்க்கவும் தெரியும்: ஜோதிராதித்ய சின்ஹா

மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா புதன்கிழமை, பிரதமா் நரேந்திர மோடி கள அளவிலான பிரச்னைகளை சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாமல், அவற்றின் தீா்வையும் உறுதி செய்வதன் மூலம் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க

7500 மருத்துவ முகாம்களை நடத்தும் தில்லி அரசு

பெண்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக பிரதமா் நரேந்திர மோடியால் புதன்கிழமை தொடங்கப்பட்ட ’ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவாா்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தில்லி அரசு தேசிய தலைநகரில் 7,500 முகாம்களை அ... மேலும் பார்க்க