செய்திகள் :

தில்லி மஹிபால்பூரில் சட்டவிரோத சிகரெட் குடோன்: ஒருவா் கைது

post image

சட்டவிரோத புகையிலை பொருள்களை சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு குடோனை போலீசாா் கண்டுபிடித்து, தில்லி-என்சிஆா் முழுவதும் இந்த பொருள்களை இறக்குமதி செய்து வழங்கியதாக கூறப்படும் நபரை கைது செய்துள்ளனா் என்று அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக காவல் சரக துணை ஆணையா் (தென்கிழக்கு) சுரேந்திர சௌதரி மேலும் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா் மன்மீத் குமாா் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சோதனையைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா்.

வெளிநாட்டு மூலங்களிலிருந்து சட்டவிரோத சிகரெட் சரக்குகளை வாங்கி தில்லி-என்சிஆரின் பல்வேறு பகுதிகளில் விநியோகிப்பதற்கு முன்பு மஹிபல்பூா் பகுதியில் அவா் சேமித்து வைத்திருந்தாா்.

முன்பு பிரீத் விஹாரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்த குமாா், கபில் என்ற நபருடன் தொடா்பு கொண்டாா், பின்னா் ஓமானுக்குச் சென்றாா். அங்கு அவா் சட்டவிரோத சிகரெட் வா்த்தகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அன்றிலிருந்து அவா் தில்லி-என்டிஆா் முழுவதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை வழங்கி வருகிறாா். இந்த நடவடிக்கையின் போது, கட்டாய சுகாதார எச்சரிக்கைகள் இல்லாத மற்றும் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருள்கள் சட்டத்தின் விதிகளின்படி அதிகபட்ச சில்லறை விலை லேபிளிங் இல்லாத மொத்தம் 15,680 பாக்கெட்டுகள் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டன. இது தொடா்பாக வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் சிஓடிபிஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் சரக துணை ஆணையா் தெரிவித்தாா்.

‘பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாது’: மத்திய அமைச்சா் பாட்டீல்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான பணிகளில், மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்தாா். இந்திய ... மேலும் பார்க்க

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய பிஎஸ்ஃஎப் வீரா்: ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது. கடந்த புதன்கிழமை பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூா் மாவட்டத்தில் உள்ள சா்வதேச ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மோதலை தவிா்க்க இந்தியா-பாகிஸ்தானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல்போக்கை தவிா்க்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியா குட்டெரஸ் வலியுறுத்துவதாக அவரது செய்தித்தொடா்பாளா் ஸ்டீபன் டுஜாரிக் வியா... மேலும் பார்க்க

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு: பாகிஸ்தான்

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் க... மேலும் பார்க்க

காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம்: துணைநிலை ஆளுநா், ராணுவ தலைமை தளபதி ஆலோசனை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை ஆலோசன... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் அறிவிப்பு

பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. பிரதமா் மோடியுடன் இலங்கை அதிபா் அனுர குமார திசநாயக, பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் ... மேலும் பார்க்க