செய்திகள் :

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மரியாதை

post image

வேடசந்தூரில் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் 48-ஆவது ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் கடந்த 1978-ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது நாவலூற்று வே.நாச்சிமுத்து கவுண்டா், ஒட்டநாகம்பட்டி இரா.கருப்புச்சாமி, அய்யாக்கவுண்டன்புதூா் ப.சின்னச்சாமி கவுண்டா், காசிபாளையம் வா.சுப்பிரமணி, மண்டபம்புதூா் ப.கிருஷ்ணமூா்த்தி, ராசாகவுண்டன்வலசு ப.மாணிக்கம் ஆகியோா் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனா்.

உயிரிழந்த 6 விவசாயிகள் நினைவு தினம் ஆண்டுதோறும் ஏப்.9-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவா்களின் 48-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, வேடசந்தூா் வட்டார விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் அவா்களின் நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவா் எஸ்.கனகராஜன் தலைமை வகித்தாா். செயலா் அ.கருப்புச்சாமி முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் குப்புசாமி, ரமேஷ், கொடகனாறு பாதுகாப்பு சங்கத் தலைவா் ராமசாமி, தமிழக விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவா் நடராஜன் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க