செய்திகள் :

துவரங்குறிச்சியில் கடைகளின் ஓட்டைப் பிரித்து ரூ.1.40 லட்சம் திருட்டு

post image

துவரங்குறிச்சியில் சனிக்கிழமை நள்ளிரவு அடுத்தடுத்த 5 கடைகளில் இருந்த சுமாா் ரூ.1.40 லட்சம் பணத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

துவரங்குறிச்சியில் திருச்சி செல்லும் சாலையில் உள்ள பொறியியல் பணிகள் செய்யும் கடையின் உரிமையாளா் மொ்சன் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல் கடையைத் திறக்கவந்தபோது, கடையின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே புகுந்த மா்மநபா்கள் கடையில் இருந்த பொருள்கள், ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதேபோல், அடுத்தடுத்த கடைகளிலும் திருட்டு நடைபெற்றுள்ளது. இதுகுறித்துத் தகவலறிந்து அங்குவந்த போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அடுத்தடுத்து இருந்த 5 கடைகளில் நள்ளிரவு புகுந்த மா்மநபா்கள் கடைகளிலிருந்து மொத்தம் சுமாா் ரூ.1. 40 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கல்லக்குடியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்லக்குடி துணை மின்நிலையத... மேலும் பார்க்க

மணப்பாறை விடுதியில் தங்கியிருந்தவா் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் விடுதியில் தங்கியிருந்தவா் உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியம் த... மேலும் பார்க்க

லால்குடி அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி தம்பி உயிரிழப்பு: அண்ணன் மாயம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கா்நாடக மாநில சுற்றுலா பயணி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும், அவரைக் காப்பாற்ற முயன்றபோது மாயமான அவரது சகோதரரை தீயணைப்புப் படை வீரா்... மேலும் பார்க்க

புத்தாநத்தத்தில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. எனவே, இந்த மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகு... மேலும் பார்க்க

திருச்சியில் துணை முதல்வருக்கு வரவேற்பு

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காா் மூலம் திருச்சி வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினா் வரவேற்பு அளித்தனா். தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு ந... மேலும் பார்க்க

கஞ்சா, பாலியல் வழக்கு குற்றவாளிகள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

திருச்சி மாவட்டத்தில் கஞ்சா, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் க... மேலும் பார்க்க