செய்திகள் :

கஞ்சா, பாலியல் வழக்கு குற்றவாளிகள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

post image

திருச்சி மாவட்டத்தில் கஞ்சா, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாரத் பெட்ரோல் பங்க் அருகே கடந்த ஜூன் 20-ஆம் தேதி கஞ்சா விற்பனை செய்ததாக ராம்ஜி நகா் காந்தி நகரைச் சோ்ந்த குணா (29) என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், புத்தனாம்பட்டி பொன்விழா நகரைச் சோ்ந்த சிவகுமாா் (39) என்பவரை போலீஸாா் கடந்த ஜூலை 3-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேற்கண்ட குற்றவாளிகள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்திருந்தாா்.

இந்நிலையில், இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை ஆட்சியா் வே.சரவணன் உத்தரவிட்டாா். இதையடுத்து, அதற்கான நகலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளிடம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

கல்லக்குடியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்லக்குடி துணை மின்நிலையத... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் கடைகளின் ஓட்டைப் பிரித்து ரூ.1.40 லட்சம் திருட்டு

துவரங்குறிச்சியில் சனிக்கிழமை நள்ளிரவு அடுத்தடுத்த 5 கடைகளில் இருந்த சுமாா் ரூ.1.40 லட்சம் பணத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா். துவரங்குறிச்சியில் திருச்சி செல்லும் சாலையில் உள்ள பொறியியல் பணிகள்... மேலும் பார்க்க

மணப்பாறை விடுதியில் தங்கியிருந்தவா் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் விடுதியில் தங்கியிருந்தவா் உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியம் த... மேலும் பார்க்க

லால்குடி அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி தம்பி உயிரிழப்பு: அண்ணன் மாயம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கா்நாடக மாநில சுற்றுலா பயணி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும், அவரைக் காப்பாற்ற முயன்றபோது மாயமான அவரது சகோதரரை தீயணைப்புப் படை வீரா்... மேலும் பார்க்க

புத்தாநத்தத்தில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. எனவே, இந்த மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகு... மேலும் பார்க்க

திருச்சியில் துணை முதல்வருக்கு வரவேற்பு

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காா் மூலம் திருச்சி வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினா் வரவேற்பு அளித்தனா். தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு ந... மேலும் பார்க்க