செய்திகள் :

தூங்கிக் கொண்டிருந்த பெட்ரோல் பங்க் ஊழியரை இரும்பு ராடால் அடித்து கொன்ற ஓட்டுநர்கள் - கோவை அதிர்ச்சி

post image

தூத்துக்குட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு தனியார் நிறுவனத்துக்கு சரக்கு ஏற்றி வந்த லாரி ஓட்டுநர்கள் சரவணக்குமார் மற்றும் மாரிமுத்து ஆகியோர் அந்த பெட்ரோல் பங்க் முன்பு லாரியை திருப்ப முயற்சி செய்தனர்.

கொலை செய்யப்பட்ட காளிமுத்து

அப்போது விபத்து ஏற்படுத்தும் வகையில் லாரியை இயக்கியதால் காளிமுத்து அவர்களை எச்சரித்துள்ளார்.

இதனால் காளிமுத்துவுக்கும், ஓட்டுநர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு ஓட்டுநர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து ஓட்டுநர்கள் சரவணக்குமார் மற்றும் மாரிமுத்து இரவு 12 மணியளவில் பெட்ரோல் பங்குக்கு மீண்டும் வந்துள்ளனர்.

சடலமாக

அப்போது மது போதையில் இருந்துள்ளனர். காளிமுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இருவரும் காளிமுத்துவை தூக்கத்திலேயே இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காளிமுத்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.

தகவலறிந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் காளிமுத்துவின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஓட்டுநர்கள்  கொலை செய்துவிட்டு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியது தெரியவந்தது.

கைது

காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே கைது செய்யும்போது, இருவரும் தப்பி ஓட முயற்சித்தனர். இதில் அவர்கள் கீழே விழுந்து இருவருக்கும் காலில் முறிவு ஏற்பட்டது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

'இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்' - சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகள்; காரணம் என்ன?

ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள தரவுகளின் படி, 2023-24 ஆண்டில், இந்தியளவில் தமிழ்நாட்டில் தான் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களால் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சாலை ... மேலும் பார்க்க

சென்னை: ஒரே நாளில் 7 செயின் பறிப்புச் சம்பவங்கள்; ஒருவர் என்கவுன்டர்; மூவர் கைது; என்ன நடந்தது?

சென்னையில் நேற்று (மார்ச் 25) காலை ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இவைச் சுமார் ஒரு மணி நேரத்தில் நடந்துள்ளன. இவற்றில் சம்பந்தப்பட்ட இருவரை போலீசார் சிசிடிவி கேமரா உதவியுடன்‌ சென்ன... மேலும் பார்க்க

"யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்தேன்" - சிவகங்கை இளைஞர் கைது; கூட்டாளிகளுக்கு வலைவீச்சு

சிவகங்கை மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த குற்றத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சாதி ரீதியான மோதல்கள் உள்ளிட... மேலும் பார்க்க

மதுரை: இயக்குநர் வீட்டில் களவு; `5 நாள்களாகியும் விசாரணை இல்லை...' - காவல்துறை மீது குற்றச்சாட்டு!

எழுத்தாளரும் இயக்குநருமான லக்ஷ்மி சரவணக்குமார் தனது வீட்டில் பணம், நகை திருடப்பட்டுவிட்டதாகவும், அது குறித்து புகார் அளிக்கப்பட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.தனியாக வாழும்... மேலும் பார்க்க

சிவகங்கை: பயிற்சி மருத்துவருக்குப் பாலியல் தொல்லை; நள்ளிரவு மருத்துவக் கல்லூரியில் என்ன நடந்தது?

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து நேற்று (மார்ச் 24) இரவு விடுதிக்குச் சென்ற பயிற்சி மருத்துவர் மீது பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க

சென்னை: ஒரே நாளில் `பல' செயின் பறிப்புச் சம்பவங்கள்; அலறிய வாக்கி டாக்கிகள் - சிக்கிய உபி இளைஞர்கள்!

சென்னை, திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இருவர், பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க செயினைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில்... மேலும் பார்க்க