செய்திகள் :

தூத்துக்குடி: 70 வழக்குகளில் 5 மாவட்ட போலீஸால் தேடப்பட்ட முகமூடிக் கொள்ளையர்; சிக்கியது எப்படி?

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் டி.எஸ்.பி ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீஸாரைக் கண்டதும் ஒருவர் வேகமாகச் சென்றார். அவரை போலீஸார் நிறுத்த முயன்றனர். ஆனால், அவர் நிற்காமல் வேகமாகச் சென்றார்.

சந்தேகமடைந்த போலீஸார் அவரைப் பின் தொடர்ந்து மடக்கிப் பிடித்தனர். பைக்கை போட்டுவிட்டு தப்பியோட முயன்றவரைத் துப்பாக்க்கி முனையில் பிடித்தனர்.

பின்னர் அவரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட சந்திர குமார்
கைது செய்யப்பட்ட சந்திர குமார்

அவர், நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள கீழகாடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரகுமார் என்பதும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்ட போலீஸாரால் தேடப்பட்டு வரும் பிரபல முகமூடிக் கொள்ளையர் என்பதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். அப்போது அவர்கள், “கோவில்பட்டியில் துப்பாக்கி முனையில் பிடிபட்ட சந்திரகுமார் மீது கோவில்பட்டி, எட்டயபுரம், எப்போதும்வென்றான், சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, முன்னீர்பள்ளம், சேரன்மகாதேவி, சங்கரன்கோவில், ஆலங்குளம், தக்கலை, சிவந்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

வீடுகள், கடைகளை உடைத்து கொள்ளையடித்தல், பைக்குகள் திருட்டு எனப் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸார் சந்திரகுமாரைத் தேடி வந்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்

அவரிடமிருந்து 3 பைக்குகள், அரிவாள், கடப்பாறை, ஸ்குரு டிரைவர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவர் மீது நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கொள்ளைச் சம்பவத்தை முடித்த பிறகு களக்காடு மலைப்பகுதியில் பதுங்கிக் கொள்வார்.

கொள்ளையில் ஈடுபடும் போது சி.சி.டி.வி கேமராவில் அவரது முகம் தெரியாமல் இருக்க முகமூடி, கையுறை அணிந்து கொள்வார்.

இதனால் அவரைப் பிடிப்பதில் போலீஸாருக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. தற்போது வாகனச் சோதனையில் சிக்கிக் கொண்டார்” என்றனர்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பல் சிகிச்சை எடுத்துகொண்ட 8 பேர் மரணம்... சர்ச்சையில் வாணியம்பாடி கிளினிக் - நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பி.ஜே.என்.நேரு சாலையில், `வி.டி.எஸ் - அறிவு பல் மருத்துவமனை’ என்கிற பெயரில், தனியார் கிளினிக் செயல்பட்டுவந்தது. இங்கு வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த இந்திர... மேலும் பார்க்க

20 ஆண்டுகளில் பாலியல் கொடுமைக்கு இரையான 299 பேர்... பிரான்ஸை அதிரவைத்த ஓய்வுபெற்ற மருத்துவர்!

கடந்த 20 வருடங்களில் சிறுமிகள், பெண்கள் என 299 பேரை பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஓய்வுபெற்ற மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ராய... மேலும் பார்க்க

மண்ணில் புதைக்கப்பட்ட ஏலக்காய் மூடைகள்; இலங்கைக்கு கடத்த முயன்ற தந்தை - மகனுக்கு போலீஸ் வலை!

கடந்த சில ஆண்டுகளாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து போதைப்பொருள்கள், கஞ்சா, கடல் அட்டை போன்றவை இலங்கைக்கு கள்ளத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தும் விராலி மஞ்சள்,... மேலும் பார்க்க

தூத்துக்குடி: நிலத்தைக் கேட்டு பெண்ணிற்குக் கொலை மிரட்டல்; திமுக எம்எல்ஏ-வின் சகோதரர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ., சண்முகையா. இவரது உடன்பிறந்த சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன்.தொழிலதிபரான இவர் முன்னாள் அ.தி.மு.க பிரமுகர். முருகேசன் ஓட்டப்... மேலும் பார்க்க

`தொழிலதிபரிடம் லஞ்சம்' - அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த சிபிஐ; சிக்கியது எப்படி?

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அமலாக்கத் துறையின் இணை இயக்குநர் சிந்தன் ரகுவம்சி. இவர் தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயன்றபோது சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வெளியான செய்தியில், சுரங்... மேலும் பார்க்க

புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய போலீஸ் - தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு பறந்த புகார்

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்கு தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திரு... மேலும் பார்க்க