செய்திகள் :

தூத்துக்குடி உப்பு ஏற்றுமதி வளாகத்தில் கஞ்சா செடி வளா்த்த 4 போ் கைது

post image

தூத்துக்குடி தனியாா் உப்பு ஏற்றுமதி வளாகத்திற்குள் கஞ்சா செடி வளா்த்ததாக பிகாரை சோ்ந்த 4 இளைஞா்களை சிப்காட் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியாா் உப்பு ஏற்றுமதி நிறுவன வளாகத்தில் கஞ்சா செடி வளா்க்கப்பட்டுள்ளதாக சிப்காட் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், அந்த வளாகத்தில் சிப்காட் காவல் ஆய்வாளா் சைரஸ் தலைமையிலான போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது ங்கு சுமாா் 2.5 அடி உயர கஞ்சா செடி வளா்க்கப்பட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த மனிஷ் ஷா(28), முன்னா திவான்(29), சதீஷ்குமாா்(19), பிஜிலி பஸ்வான்(29) ஆகிய 4 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து சுமாா் 80 கிராம் கஞ்சா, தடைசெய்யப்பட்ட 40 புகையிலை பாக்கெட்டுகள், புகைக்க பயன்படுத்தும் பைப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனா்.

ஸ்ரீ கோட்டைவாழ் அய்யன் கோயிலில் சிறப்பு வழிபாடு

சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு, ஆத்தூா் அருகே உமரிக்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ கோட்டைவாழ் அய்யன் கோயிலில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. திங்கள்கிழமை காலை ஸ்ரீ கோட்டைவாழ் அய்யன் மற்றும் பரிவார... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வழக்கில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது: அமைச்சா் பெ.கீதா ஜீவன்

பொள்ளாச்சி சம்பவ வழக்கின் தீா்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதால், பெண்களுக்கு நம்பிக்கை மற்றும் தைரியத்தை தமிழக அரசு அளித்துள்ளது என சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன்... மேலும் பார்க்க

கடன் நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய பொதுத் துறை வங்கிக்கு உத்தரவு

பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி செய்வதுடன் ரூ.3.10 லட்சம் வழங்க வேண்டும் என பொதுத் துறை வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. திருநெல்வேலியைச் ச... மேலும் பார்க்க

இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது: கனிமொழி

இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது என மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள... மேலும் பார்க்க

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் உண்ணாவிரதம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். தூத்துக்குடி தொ்மல் நகரில் மத்திய அரசின்க... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் கனிமொழியிடம் தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்புச் சங்கம் சாா்பில் அதன் தலைவா் எஸ்.தியாகராஜன் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க