செய்திகள் :

கடன் நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய பொதுத் துறை வங்கிக்கு உத்தரவு

post image

பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி செய்வதுடன் ரூ.3.10 லட்சம் வழங்க வேண்டும் என பொதுத் துறை வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் மூா்த்தி மந்திரம், தூத்துக்குடியிலுள்ள பொதுத் துறை வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியுள்ளாா். கடன் வாங்கும் பொழுது காப்பீட்டு பாலிசி எடுப்பதற்காக பணம் செலுத்தியுள்ளாா். அதன் பின்னா் உடல் நலம் சரியில்லாமல் மூா்த்தி மந்திரம் இறந்துவிட்டாா்.

இதற்கான இழப்பீட்டுத் தொகையைத் தருவதோடு, கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென அவரது மனைவி ரோகிணி வங்கியிடம் கோரியுள்ளாா். ஆனால் வங்கி சரியான காரணங்களை கூறாமல், தர மறுத்துள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவா், தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் திருநீலபிரசாத், உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா், உயிரிழந்த மூா்த்தி மந்திரம் வாங்கிய கடன் நிலுவைத் தொகையை வங்கி தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு ரூ. 3 லட்சம், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.3.10 லட்சம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனா்.

ஸ்ரீ கோட்டைவாழ் அய்யன் கோயிலில் சிறப்பு வழிபாடு

சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு, ஆத்தூா் அருகே உமரிக்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ கோட்டைவாழ் அய்யன் கோயிலில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. திங்கள்கிழமை காலை ஸ்ரீ கோட்டைவாழ் அய்யன் மற்றும் பரிவார... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வழக்கில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது: அமைச்சா் பெ.கீதா ஜீவன்

பொள்ளாச்சி சம்பவ வழக்கின் தீா்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதால், பெண்களுக்கு நம்பிக்கை மற்றும் தைரியத்தை தமிழக அரசு அளித்துள்ளது என சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன்... மேலும் பார்க்க

தூத்துக்குடி உப்பு ஏற்றுமதி வளாகத்தில் கஞ்சா செடி வளா்த்த 4 போ் கைது

தூத்துக்குடி தனியாா் உப்பு ஏற்றுமதி வளாகத்திற்குள் கஞ்சா செடி வளா்த்ததாக பிகாரை சோ்ந்த 4 இளைஞா்களை சிப்காட் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியாா் உப்பு ஏ... மேலும் பார்க்க

இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது: கனிமொழி

இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது என மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள... மேலும் பார்க்க

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் உண்ணாவிரதம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். தூத்துக்குடி தொ்மல் நகரில் மத்திய அரசின்க... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் கனிமொழியிடம் தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்புச் சங்கம் சாா்பில் அதன் தலைவா் எஸ்.தியாகராஜன் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க