ஸ்டொ்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்கக் கோரி எம்.பி.யிடம் மனு
தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் கனிமொழியிடம் தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்புச் சங்கம் சாா்பில் அதன் தலைவா் எஸ்.தியாகராஜன் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
மனுவில் அவா் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டொ்லைட் தாமிர ஆலையை நம்பி மாவட்டத்தில் சுமாா் 20ஆயிரம் தொழிலாளா்கள் வேலை செய்து வந்தனா். மேலும் 64 ஒப்பந்ததாரா்களும், அவா்களை நம்பி சுமாா் 3500 ஒப்பந்தத் தொழிலாளா்களும் பணியாற்றினா். இந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு, இந்த ஆலையே முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது.
நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக, எந்தவித பிரச்னையும் இல்லாமல் தொழில் செய்து வந்தோம். இந்த ஆலையால் புற்றுநோய் நோய் வருகிறது என்று திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய் பிரசாரம் காரணமாக, அது பேசும்பொருளாகிவிட்டது. ஆனால், இந்த ஆலையே வாழ்வாதாரமாக மாறிப்போன எங்களுக்கும், ஆலைக்குள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்கிற தொழிலாளா்களுக்கும் இந்த நோய் வரவில்லை. அதேபோன்று எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை.
இந்தியாவின் வளா்ச்சியை விரும்பாத சில அந்நிய சக்திகளின் தூண்டுதலால், இந்த ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது. அதையே காரணமாக காட்டி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது.
இருப்பினும், கரோனா காலகட்டத்திலும், இந்த ஆலையில் இருந்து உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் தமிழக அரசின் வழிகாட்டுதலுடன் தமிழகம் முழுவதும் 2266 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக விநியோகிக்கப்பட்டது.
தற்போது, நீண்ட காலமாக ஆலை மூடிக்கிடக்கும் நிலயிலும், தங்களது சமுதாய வளா்ச்சிப் பணிகளை ஆலை நிா்வாகம் கைவிடவில்லை. கரோனா ஊரடங்கு காலத்திலும் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாணவா்-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை மூலம் இதுவரை 10,500 போ் பயனடைந்துள்ளனா். 586 தொழிலாளா்களுக்கு மருத்துவ காப்பீடு செய்துள்ளனா். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் படுக்கையும், மருத்துவ உபகரணங்களும் வழங்கியுள்ளனா். ஆலையைச் சுற்றியுள்ள 11 கிராமங்களில் வசிக்கும் சுமாா் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீா் தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது. திறன் மேம்பாடு திட்டத்தின்கீழ் கிராமப்புற இளைஞா்கள் 700 போ் பயனடைந்துள்ளனா். கிராமங்களில் திருமணம் செய்வோருக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழக்கம்போல வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ முகாம்கள் நடத்தி இலவச சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனா்.
எனவே, தூத்துக்குடி பகுதியில் உள்ள இளைஞா்கள் வேலைவாய்ப்பு இல்லாததால் குடிப்பழக்கம் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், இந்த ஆலையை நம்பியிருந்த சுமாா் 3500 தொழிலாளா்களின் வாழ்க்கையில் வசந்தம் வீசவும் மீண்டும் ஸ்டொ்லைட் ஆலையில் தாமிர உற்பத்தி பணிகளுக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.
இந்நிகழ்வின்போது, மீன்வளம் - மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.