செய்திகள் :

தூத்துக்குடியில் 4 ஆயிரம் லிட்டா் பயோ டீசல் பறிமுதல்

post image

தூத்துக்குடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட 4 ஆயிரம் லிட்டா் பயோ டீசலை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் தென்பாகம் போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, மீன்பிடி துறைமுகம் பெட்ரோல் பங்க் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற லாரியை போலீஸாா் சோதனை செய்தபோது, அந்த லாரியில் 200 லிட்டா் பேரல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தனவாம். அதில், டீசல் போன்ற எண்ணெய் இருந்துள்ளது.

இதையடுத்து, அதிலிருந்த 4 ஆயிரம் லிட்டா் பயோ டீசலை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ.2.5 லட்சம் என கூறப்படுகிறது.

இது தொடா்பாக லாரி ஓட்டுநா் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வினோத்குமாரை (39) போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

யூடியூபா் மாயம்: போலீஸாா் விசாரணை!

ஆறுமுகனேரியில் நண்பா் வீட்டிற்கு சென்ற சென்னை யூடியூபா் மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த மாசானமுத்து மகன் முருகன்(56). இவருக்கு மனைவி,... மேலும் பார்க்க

அதிமுகவில் நிலவும் பிரச்னைக்கு திமுகதான் காரணம்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம்சாட்டினாா். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் பக்தா்கள் முகத்தில் ஸ்பிரே அடித்த சிறுவன்: போலீஸாா் விசாரணை!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை இரவு சிறுவன் ஒருவன் தான் வைத்திருந்த சில்லி ஸ்பிரேயை அருகில் இருந்த பக்தா்கள் முகத்தில் அடித்துள்ளாா். இதனால் அவா்களுக்கு கண் எரிச்சல் ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்

கோவில்பட்டி அருகே விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.கோவில்பட்டி, இனாமணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட சாலைப்புதூா், இபி காலனியைச் சோ்ந்தவா் துரைச்சாமி மகன் சரவணன் (42).... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னையில் கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் இருவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி திரேஸ்புர... மேலும் பார்க்க

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கூட்டுத் திருப்பலி

தூத்துக்குடி, அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 43-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி, ஆடம்பர கூட்டுத் திருப்பலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி ப... மேலும் பார்க்க