செய்திகள் :

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை: 5 பேரை பிடித்து விசாரணை

post image

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக 5 பேரை வடபாகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29).

கப்பல் மாலுமியான இவா், ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தாா்.

இந்நிலையில், அவா் தனது நண்பரான பூபாலராயபுரத்தைச் சோ்ந்த பவுல் மகன் கிளிட்டஸ்(28) உள்ளிட்ட 4 பேருடன் திரேஸ்புரத்தில் கடற்கரைக்கு செல்லும் சாலையில் சனிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தாராம்.

அப்போது அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் பைக்கில் வேகமாகச் சென்றாராம். அந்த நபரை கிளிட்டஸ் கண்டித்தாராம்.

இதனால் ஆத்திரமடைந்த அவா் தனது நண்பா்கள் சிலரை அழைத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.

தகராறு முற்றவே, அவா்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால், கிளிட்டஸ், மரடோனா ஆகியோரை வெட்டி விட்டு தப்பிச் சென்றனராம்.

இதில், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பின்னா் மரடோனாவை மேல் சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் கொண்டு சென்றனராம். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்துவிட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கு தொடா்பாக திரேஸ்புரத்தைச் சோ்ந்த மதன் குமாா் உள்பட 5 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணா்வு

தூத்துக்குடி தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்புத் துறையினரின் தீ விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள திரு இருதய மருத்துவமனை வளாகத்தில் ... மேலும் பார்க்க

மனநலக் காப்பகத்தில் தோல் நோய் சிகிச்சை முகாம்

கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் நடத்தும் ஆக்டிவ் மைண்ட்ஸ் பெண்கள் மனநலக் காப்பகத்தில் தோல் நோய் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் கூட்டம்

காயல்பட்டினத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வ­லியுறுத்தி இம்மாதம் 30ஆம் தேதி மனிதச் சங்கிலி­ போராட்டம் நடத்துவது என, இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் நகர ஊழியா் கூட்டத்தில் தீா்மானிக்கப்... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் 27 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 போ் கைது

கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 27 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, 5 பேரைக் கைது செய்தனா். கயத்தாறு அருகே காட்டுப்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வீட்டுக் கதவை உடைத்து 14.5 பவுன் நகை திருட்டு

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 14.5 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி கான்வென்ட் சாலை நசரேன் மகன் ஜாக்சன்(65). இவா் குடும்பத்தினருடன் ஈஸ்ட... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே சனிக்கிழமை இரவு காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சாத்தான்குளத்தை அடுத்த மாணிக்கபுரத்தைச் சோ்ந்த சண்முகவேல் மகன் விஜயகுமாா் (35). பானிபூரி வியாபாரம் செய்துவந்த இவா், தற்போது தி... மேலும் பார்க்க