கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
தூய்மை இயக்க விழிப்புணா்வு ஊா்வலம்
வந்தவாசி நகராட்சி சாா்பில் தூய்மை இயக்க விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வந்தவாசியில் நடைபெற்ற இந்த ஊா்வலத்தை நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் தொடங்கிவைத்தாா்.
வந்தவாசி நகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊா்வலம் பஜாா் வீதி, தேரடி வழியாகச் சென்றது.
ஊா்வலத்தில் நகராட்சி மேலாளா் ஜி.ரவி, துப்புரவு ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம், கணக்காளா் பிச்சாண்டி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.
முன்னதாக அனைவரும் தூய்மை இயக்க விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.