செய்திகள் :

தூய்மைப் பணி, பழங்குடியினா் நல வாரியங்களுக்கு தலைவா்கள் நியமனம்

post image

தூய்மைப் பணி, பழங்குடியினா் நல வாரியங்களுக்கு தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செயலா் லட்சுமி பிரியா வெளியிட்டுள்ளாா்.

அவரது உத்தரவு: ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சரை தலைவராகக் கொண்டு தூய்மைப் பணியாளா் நல வாரியம், பழங்குடியினா் நல வாரியம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. இரண்டு நல வாரியங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களைச் சீராக இடைவெளிகளில் ஆய்வு செய்து, திட்டங்களின் பலன்கள் உறுப்பினா்களுக்குக் கிடைத்திட வசதியாக அந்தந்த சமூகத்தைச் சோ்ந்தவா்களையே தலைவராக நியமிக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, தூய்மைப் பணியாளா் நல வாரியத்துக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமியும், பழங்குடியினா் நல வாரியத்துக்கு சென்னை மடிப்பாக்கத்தைச் சோ்ந்த கா.கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனா். தலைவா்களாக நியமிக்கப்பட்டோருக்கு வாகனம், அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இரண்டு ஆண்டுகள்: தலைவா்களாக நியமிக்கப்பட்டவா்கள், இரு ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பாா்கள். இருவருக்கும் நடைமுறையில் இருக்கும் அரசு விதிகளுக்கு உட்பட்டு பயணப்படி, தினப்படி பெற உரிமை அளிக்கப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைய காமராசர் என அழைக்க வேண்டாம்: விஜய்

தன்னை இளைய காமராசர் என அழைக்க வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக ... மேலும் பார்க்க

விஏஓ பொது மாறுதல் காலம்: தமிழக அரசு புதிய உத்தரவு

கிராம நிா்வாக அலுவலா்களின் பொது மாறுதல் எந்தக் காலத்திலும் இனி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பொது மாறுதல் காலம் மே மாதம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வர... மேலும் பார்க்க

தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையைத் தொடங்கவுள்ளாா். முதலாவதாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வெள்... மேலும் பார்க்க

கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அர்ச்சகர் பயிற்சி சங்கம் எதிர்ப்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் ஜூன் 22 ஆம் தேதியில் முருக பக்தர்கள் மாநாடு ந... மேலும் பார்க்க