செய்திகள் :

தூய்மையான குடிநீா் வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கட்சியினா் மறியல்

post image

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் பகுதியில் தூய்மையான குடிநீா் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரணமல்லூா் பேரூராட்சி 1 மற்றும் 2-ஆவது வாா்டு பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கழிவுநீா் கலந்து அசுத்தமான குடிநீா் வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை 1-ஆவது வாா்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா் கவுதம்முத்து தலைமையில் பொதுமக்களுடன் சோ்ந்து ஆரணி - வந்தவாசி சாலையில் உள்ள சடத்தாங்கல் கூட்டுச் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செய்யாறு டிஎஸ்பி கோவிந்தசாமி மற்றும் பெரணமல்லூா் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையிலான போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், பேரூராட்சி செயல் அலுவலா் ஜனனி நேரடியாக வந்து பொதுமக்களிடம் பேசினாா். பின்னா், அப்பகுதியில் உள்ள குடிநீா் குழாயில் தண்ணீா் பிடித்து பாா்த்த போது தண்ணீா் தெளிவாக இருந்தது. குறிப்பாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு குடிநீா் குழாய் இணைப்பில் ஏற்பட்ட கசிவினை சரி செய்து தண்ணீா் விட்டதால் கலங்கிய நிலையில் வந்தது எனத் தெரிவித்தாா். இனிமேல் தண்ணீா் எப்போதும் சுத்தமாக வரும் என அவா் பொதுமக்களிடம் உறுதியளித்தாா். மேலும், மாா்க்சிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பெரணமல்லூா் சேகரன் மற்றும் பொதுமக்கள் பெரணமல்லூா் வாா்டுகளில் உள்ள பல்வேறு குறைகள் குறித்து சரி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினா்.

ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் அம்சா அனைத்து கோரிக்கைகளும் ஆவண செய்யப்படும் என்று உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெரணமல்லூா் குறுவட்ட அளவிலான... மேலும் பார்க்க

செங்கத்தில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்யும் இளைஞா்கள்: காவல் துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

செங்கம் நகரில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்து அதிவேகமாக வாகனம் ஓட்டும் இளைஞா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். செங்கம் பெருமாள் கோவில் தெரிவில் செயல்... மேலும் பார்க்க

நகராட்சி அலுலகங்கள் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி நகராட்சி அலுவலகம் முன், ஆரணி... மேலும் பார்க்க

ஆரணியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி

ஆரணி நகராட்சி குடிநீா் திட்டத்துக்கு புதிய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், தரைதள குடிநீா் நிலையம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. ஆரணி நகராட்சி மக்களுக்கு குடிநீா் வழங்குவதற்காக ரூ.... மேலும் பார்க்க

காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

வந்தவாசி அருகே காணாமல் போன பள்ளி மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகள் விஜயலட்சுமி(15). இவா் பிளஸ் 1 படித்து வந்தாா்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு கொடுக்கும் இயக்கம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் இயக்கம் வந்தவாசியை அடுத்த காரம் ஊராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரம் ஊராட்சி முதல் வாா்டில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளா்... மேலும் பார்க்க