செய்திகள் :

தென்கரையில் மஞ்சுவிரட்டு: 3 போ் மீது வழக்கு

post image

திருப்பத்தூா் அருகேயுள்ள தென்கரையில் மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது. இது அனுமதியின்றி நடத்தப்பட்டதால், 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தென்கரை அந்தரநாச்சி, ஆகாச கருப்பா், குன்னு காளியம்மன், குன்னு அய்யனாா் கோயில் பால்குடம், பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக, ஊா் பெரியோா்கள் நகரின் முக்கிய வீதி வழியாக மேளதாளத்துடன் ஆளவட்டத்தோடு கோயிலில் இருந்து புறப்பட்டு மஞ்சுவிரட்டுத் திடலைச் சென்றடைந்தனா்.

முதலாவதாக கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. பின்னா், தொடா்ந்து சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

தொழுவத்திலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், சிறப்பாக செயல்பட்ட காளைகளுக்கும் விழா குழுவின் சாா்பில் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்த மஞ்சுவிரட்டுப் போட்டி அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்டதால், கிராம நிா்வாக அலுவலா் சிவகுமாா் அளித்த புகாரின் பேரில், சுப்பையா, வெங்கடாசலம், சின்னையா ஆகியோா் மீது நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டலுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மானாமதுரையில் ஜூன் 10- இல் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 10- ஆம் தேதி மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) பா. ஜான்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ரூ 2.70 கோடியில் பேருந்து நிலையம்: தமிழக அரசுக்கு பேரூராட்சி உறுப்பினா்கள் நன்றி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா். திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த. சேங்கைமாற... மேலும் பார்க்க

காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் ஜூன் 10- இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம்

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம் என மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் மருதுபாண்டியன் தெரிவித்தாா். சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் 2019- 2024 கல்வியாண்டுக்கான பட்டமளிப... மேலும் பார்க்க