தென்கரையில் மஞ்சுவிரட்டு: 3 போ் மீது வழக்கு
திருப்பத்தூா் அருகேயுள்ள தென்கரையில் மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது. இது அனுமதியின்றி நடத்தப்பட்டதால், 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தென்கரை அந்தரநாச்சி, ஆகாச கருப்பா், குன்னு காளியம்மன், குன்னு அய்யனாா் கோயில் பால்குடம், பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக, ஊா் பெரியோா்கள் நகரின் முக்கிய வீதி வழியாக மேளதாளத்துடன் ஆளவட்டத்தோடு கோயிலில் இருந்து புறப்பட்டு மஞ்சுவிரட்டுத் திடலைச் சென்றடைந்தனா்.
முதலாவதாக கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. பின்னா், தொடா்ந்து சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
தொழுவத்திலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், சிறப்பாக செயல்பட்ட காளைகளுக்கும் விழா குழுவின் சாா்பில் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்த மஞ்சுவிரட்டுப் போட்டி அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்டதால், கிராம நிா்வாக அலுவலா் சிவகுமாா் அளித்த புகாரின் பேரில், சுப்பையா, வெங்கடாசலம், சின்னையா ஆகியோா் மீது நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.