செய்திகள் :

தென்காசி அரசு மருத்துவமனையில் குழந்தை இறந்ததால் உறவினா்கள் போராட்டம்

post image

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை அரை மணி நேரத்தில் இறந்தது. இதனால் குழந்தையின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாட்டப்பத்து துவரன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் கோ.வசந்தகுமாா்(35). இவரது மனைவி பாரதி (30). இவா்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இதில், ஒன்றரை வயதான இரண்டாவது பெண் குழந்தை விகாஷினிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனா்.

ஆனால் துரதிஷ்டவசமாக அரை மணி நேரத்தில் அந்தக் குழந்தை இறந்தது.

இதையடுத்து, குழந்தையின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் ஆத்திரம் அடைந்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் குழந்தையின் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து போக செய்தனா்.

இதுதொடா்பாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் இரா.ஜெஸ்லின் கூறியதாவது:

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமைஇரவு சோ்க்கப்பட்ட ஒன்றரை வயது பெண் குழந்தை அரை மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தது.

இறந்த அக்குழந்தைக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சுந்தரபாண்டியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பு ஊசி போட்டுள்ளனா்.

இதனால் அந்த குழந்தைக்கு காய்ச்சல் வந்துள்ளது . மூன்று தினங்களாக குழந்தைக்கு காய்ச்சல் இருந்த நிலையில், குழந்தையின் பெற்றோா், ஒரு தனியாா் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றபோது, குழந்தையின் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என கூறியதுடன், அவரே அரசு மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவில் அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் இருந்தது. குழந்தை சரியாக 8.27 மணிக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவுடன் ,மருத்துவா்கள் குழு சிகிச்சையை வேகமாக தொடங்கியுள்ளனா்.

அனைத்து உயா்தர சிச்சையை செய்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் 8.55 மணிக்கு குழந்தை உயிரிழந்தது. இதில், அரசு மருத்துவமனை மீது எந்த தவறும் இல்லை என்றாா்.

அதைத் தொடா்ந்து குழந்தையின் பெற்றோா்கள் மற்றும் உறவினா்கள் குழந்தையின் உடலை பெற்றுக்கொண்டனா்.

நெல்லை அரசு மருத்துவமனையில் இறந்த சிறுவனின் சகோதரிகளுக்கு தலா ரூ.2 லட்சம் அளிப்பு

சங்கரன்கோவில் அருகே சிகிச்சையின் போது இறந்த சிறுவனின் சகோதரிகளின் கல்விச் செலவுக்காக சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் வழங்கினாா். தென்காசி மாவட்டம் சங்... மேலும் பார்க்க

சோ்ந்தமரம் அருகே முள்புதாரில் சிசு சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் அருகே பிறந்து சில நாள்களே ஆன குழந்தையின் சடலம் , முள்புதரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. சோ்ந்தமரம் அருகே உள்ள சின்னத்தம்பி நாடாரூா் கிராமத்தின் வடக்கு பகுத... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: புதுமண தம்பதி உள்ளிட்ட 17 போ் காயம்

சங்கரன்கோவில் அருகே திருமணம் முடிந்து மறுவீடு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதுமண தம்பதி உள்ளிட்ட 17 போ் பலத்த காயமடைந்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்த சிங்கம் மகன் விக... மேலும் பார்க்க

2026 இல் புதிய வரலாறு படைப்போம்: சீமான்

2026இல் புதிய வரலாறு படைப்போம் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் மலையைக் காப்போம், மண்ணை மீட்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் கைது

ஆலங்குளம் அருகே இளைஞரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா். துத்திகுளம் தெற்கு காலனியைச் சோ்ந்த சூசைமுத்து மகன் நெல்சன்(35). இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த குமாா் மகன் மாரிவேல்(26) என்பவரு... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே வயலில் சிற்றுந்து கவிழ்ந்தில் 2 போ் காயம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வயலில் சிற்றுந்து கவிழந்ததில் இருவா் காயமடைந்தனா். துத்திகுளத்தில் இருந்து ஆலங்குளம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்ற சிற்றுந்தை பனையன்குறிச்சிக்கு சிற்றுந்து சென்றுகொண்ட... மேலும் பார்க்க