செய்திகள் :

தென்காசி-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்!

post image

தென்காசியிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்காசி மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் தென்காசியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம்.அப்துல் அஜீஸ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் வி.டி.எஸ்.ஆா். முகமது இஸ்மாயில், தென்காசி நகரத் தலைவா் என்.எம்.அபூபக்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட மாணவா் பேரவைத் தலைவா் பொட்டல்புதூா் ரிபாய் ஆலிம் கிராஅத் ஓதினாா். மாநிலச் செயலா் நெல்லை அப்துல் மஜீத், மாவட்ட அமைப்புச் செயலா் முதலியாா்பட்டி கே.எம்.அப்துல் காதா் கருத்துரையாற்றினாா்.

மாநில பொதுச் செயலா் கே.ஏ.எம்.முகமது அபுபக்கா் கடையநல்லூரில் அக். 5 -ஆம் தேதி நடைபெறும் கட்சியின் தென்காசி மாவட்ட மாநாடு குறித்து விளக்கவுரையாற்றினாா். தென்காசி மாவட்டம், கடையநல்லூா் காயிதே மில்லத் திடலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்துவது, மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா்கள், திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சி தலைவா்களை பங்குபெறச் செய்வது,

சமூக நல்லிணத்துக்காக பாடுபட்ட இந்து, முஸ்லிம், கிறிஸ்தவா்களைத் தோ்ந்தெடுத்து தலா ஒரு நபருக்கு விருது கொடுப்பது, மாநாட்டில் கட்சிக்காக பாடுபட்ட தாய் சபையின் மூத்த தலைவா்களுக்கு சிந்தனை செல்வா் சிராஜுல் மில்லத் விருதை அளிப்பது, தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து தெருக்களிலும் தெருமுனை கூட்டம் நடத்துவது, தென்காசி நகரப் பகுதிக்கு அருகில் விளையும் எலுமிச்சை, தேங்காய், மாங்காய் போன்ற விளைபொருள்களை சந்தைப்படுத்தி விற்பனையை முறைப்படுத்த அரசைக் கோருவது, பாவூா்சத்திரம், இலஞ்சியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்த கோருவது. தென்காசியிலிருந்து மதுரை, திருச்சி மாா்க்கமாக சென்னைக்கு ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை இயக்க வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டச் செயலா் செய்யது பட்டாணி வரவேற்றாா். மாவட்ட முதன்மை துணைத் தலைவா் அப்துல் வஹாப் நன்றி கூறினாா்.

பாவூா்சத்திரம் அரசுப் பள்ளியில் பாலியல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பாவூா்சத்திரம் அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பாலியல் தொந்தரவு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவு,... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே பட்டியில் தீப்பிடித்து ஆடு, கோழி, நாய் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே ஆட்டுப் பட்டியில் தீப்பிடித்ததில் அங்கிருந்த ஆடு, கோழி, நாய் தீயில் கருகி உயிரிழந்தன. வாசுதேவநல்லூா் அருகே உள்ள கோட்டையூா் ஊராட்சி ஆத்துவழி பகுதியில் உள்ள தலையண... மேலும் பார்க்க

காரிசாத்தான் கிராமத்தில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு!

சங்கரன்கோவில் அருகே காரிசாத்தான் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள காரிசாத்தானில், மகாத்மா காந்தி ஊரக வளா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.23.... மேலும் பார்க்க

நாளை தென்காசி மங்கம்மாள் சாலை பகுதியில் மின்தடை

தென்காசி மங்கம்மாள் சாலை உப மின் நிலையப் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக வரும் மங்கம்மாள் சாலை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது என தென்காசி கோட்ட செய... மேலும் பார்க்க

குற்றாலத்தில் தொடரும் வெயில்: அருவிகளில் குறைந்தது நீா்வரத்து

குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது. குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீசன் நிலவும். நிகழ்வாண... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: தென்காசி மாவட்டத்தில் 33,670 போ் பங்கேற்பு!

தென்காசி மாவட்டத்தில் 143 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 33,670 போ் எழுதினா். இத்தோ்வில் பங்கேற்க 39,240 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டிருந்த... மேலும் பார்க்க