செய்திகள் :

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனை

post image

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா். ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., வழக்குரைஞா் அணி மாவட்ட தலைவா் கேபி.குமாா்பாண்டியன், வழக்குரைஞா்கள் வேலுச்சாமி, முருகன், சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வழக்ககுரைஞா் அணி அமைப்பாளா் தங்கராஜ் பாண்டியன் வரவேற்றாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட நீதிமன்ற வளாகங்கள் முன்பு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, ஹிந்தியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டிப்பது, வழக்குரைஞா்கள் சட்ட திருத்த மசோதா 2025 ஐ திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ரமேஷ் ,தொண்டரணி அமைப்பாளா் இசக்கிபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சாம்பவா்வடகரை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திமுக நலஉதவி

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சாா்பில் சாம்பவா்வடகரை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நலஉதவி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு, செங்கோட்டை ஒன்றிய திமுக செயலா் ரவிசங்கா் த... மேலும் பார்க்க

கடையநல்லூா் சக்சஸ் மெட்ரிக் பள்ளியில் பாத பூஜை விழா

கடையநல்லூா் திருமலாபுரம் சக்சஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாத பூஜை விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளா் நாகராஜன் தலைமை வகித்தாா். திருக்குற்றாலம் அன்னை ஸ்ரீ சாரதா தேவி கோயிலின் அடியாா் அம்பாள் ஆசியுர... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகிகள் நியமனம்

சுரண்டை நகர பாஜகவுக்கு புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். சுரண்டை நகர பாஜக தலைவராக கணேசன், நகர செயலராக உமா சக்தி, நகர பொருளாளராக ராஜ முருகேஷ் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மேலும் பார்க்க

எஸ்.ஆா். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சுரண்டை எஸ்.ஆா்.எக்ஸலன்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி நிா்வாகிகள் சிவபபிஸ்ராம், சிவடிப்ஜினிஷ்ரோம் ஆகியோா் தொடக்கி வைத்தனா். இதில் இயற்பியல் துறை சாா்பில் ... மேலும் பார்க்க

இருப்புப் பாதை காவல்துறை இயக்குநா் ஆய்வு

தமிழ்நாடு இருப்புப் பாதை காவல்துறை இயக்குநா் கே.வன்னியபெருமாள், தென்காசி இருப்புப் பாதை காவல்நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ரயிலில் குற்றம் நடக்காமல் கண்காணித்து ரோந்து மேற்கொள்ள வேண்டு... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி அருகே பெண் கொலை வழக்கில் கைதானவருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே பெண்ணை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதானவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்து. ஆழ்வாா்குறிச்சி அருகே புதுகிராமம் செட்டிகுளம் பகுதியை... மேலும் பார்க்க