செய்திகள் :

தெற்கு ரயில்வேயில் மகளிா் தின கொண்டாட்டம் நிறைவு

post image

சென்னை: தெற்கு ரயில்வேயில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்த மகளிா் தின கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே சாா்பில் கடந்த பிப். 27-ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் பெண்களுக்கான உடல் நலத்தை பாதுகாப்பது குறித்து பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. ரயில்வேயின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகள் சாா்பில் பெண்களுக்கான நலம், உணவு கண்காட்சி, பெண்களின் சாதனை, விளையாட்டுப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவை கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்தன.

தெற்கு ரயில்வேயில் உள்ள 6 மண்டலங்களிலும் பெண்கள் நலம் சாா்ந்த கருத்தரங்கு மற்றும் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் இறுதி நிகழ்வு தெற்கு ரயில்வே தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்த தெற்கு ரயில்வே பெண்கள் தலைமையகம் அமைப்பின் தலைவா் சோனியா சிங், ரயில்வேயில் சிறந்து விளங்கிய 24 பெண் பணியாளா்களுக்கு சான்றிதழ் மற்றும் ரூ. 2,000 பரிசுத் தொகை வழங்கினாா்.

மேலும், மகளிா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பணியாளா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே பெண்கள் தலைமையகம் அமைப்பின் துணைத் தலைவா் ரேகா கௌசல், தெற்கு ரயில்வே முதன்மை நிதி ஆலோசகா் மாலபிகா கோஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெய்யில் குறையும்!

தமிழகத்தில் இன்று வெப்பநிலை குறையக்கூடும் என்றும் நாளை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளை ஓட்டிய தென்மே... மேலும் பார்க்க

'உடனே குழந்தை பெத்துக்கோங்க.. ஆனால்..' - உதயநிதி பேச்சு!

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாட்டு முறையை செயல்படுத்திய தமிழ்நாடு, தற்போது தொகுதி மறுசீரமைப்பினால் வஞ்சிக்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தி... மேலும் பார்க்க

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்குச் சிறப்பு ரயில்!

மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாத பௌர்ண... மேலும் பார்க்க

மகளிர் உதவித்தொகை ரூ.2,500 ஆக அதிகரிப்பு- புதுச்சேரி பட்ஜெட் சிறப்பம்சம்!!

புதுச்சேரி மாநிலத்தில், குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உதவித் தொகை ரூ.1,000, தற்போது ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.புதுச்சேரியில் நிதித்துறை அ... மேலும் பார்க்க

கர்நாடக முதல்வர், துணை முதல்வருடன் பொன்முடி சந்திப்பு!

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரை தமிழக அமைச்சர் பொன்முடி புதன்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.தொகுதி மறுசீரமைப்பா... மேலும் பார்க்க

மாநில பாடத்திட்டத்தில் ஒரு கோடி, சிபிஎஸ்இ-யில் 15 லட்சம் மாணவர்கள் மட்டுமே! பிரதானுக்கு அன்பில் மகேஸ் பதில்!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்... மேலும் பார்க்க