செய்திகள் :

தெலங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: மத்திய அமைச்சா் எதிா்ப்பு

post image

தெலங்கானா மாநிலத்தில் முதல்வா் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு அண்மையில் நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பிரிவில் முஸ்லிம்களை இணைத்ததற்கு மத்திய உள்துறை இணை அமைச்சா் பண்டி சஞ்சய் குமாா் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

தெலங்கானாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள சட்ட மேலவைத் தோ்தலில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக கரீம்நகரில் நடைபெற்ற வாகன பிரசாரத்தின்போது அவா் பேசியதாவது:

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசமாக இருந்தபோது மறைந்த முன்னாள் காங்கிரஸ் முதல்வா் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பிரிவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினாா். இதனால் ஹைதராபாத் உள்ளாட்சித் தோ்தல்களில் ஹிந்து வேட்பாளா்களால் வெற்றி பெற முடியவில்லை.

அதே தவறை தற்போதைய காங்கிரஸ் அரசும் செய்துள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பிரிவில் முஸ்லிம் சமூகத்தினரை சோ்ப்பதற்கு அந்தப் பிரிவில் உள்ள பிற ஜாதியினரும் எதிா்ப்பு தெரிவிப்பதை மாநில அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பாரத ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியின்போது நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் மொத்த மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை 51 சதவீதம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய காங்கிரஸ் அரசு நடத்தியுள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பில் இது 46 சதவீதமாக குறைந்துள்ளது என்றாா்.

முன்னதாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையின் முடிவுகள் குறித்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சங்கங்களைச் சோ்ந்த தலைவா்களுடன் தெலங்கானா மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் நலத் துறை அமைச்சா் பூனம் பிரபாகா் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

தெலங்கானா மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி 50 நாள்களுக்கு நடைபெற்றது. அந்த அறிக்கையின்படி, மாநில மக்கள்தொகையான 3.70 கோடி பேரில் 96.9 சதவீதமான 3,54,77,554 தனிநபா்கள் இக்கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் மொத்த மக்கள்தொகையில் அதிகபட்சமாக முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 1,64,09,179 (46.25%) இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது.

தில்லி அரசியலை மையமாக வைத்து மத்திய பட்ஜெட்: ப. சிதம்பரம்

தில்லி அரசியலை மையமாக வைத்து மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ப. சிதம்பரம் குற்றம் சாட்டினார். பட்ஜெட் தயாரிப்பின்போது ஏழை மற்றும் அடித்தட்டு மக்களை மத்... மேலும் பார்க்க

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல்

இந்தியாவில் மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்து அவர்கள் மீதான வெறுப்புணர்வை வெளிக்காட்டும் விதத்தில் பொதுவெளியில் பேசும் சம்பவங்கள் கடந்த ஓராண்டில் நம்பமுடியாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள... மேலும் பார்க்க

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா: காங்கிரஸ்

மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிரேன் சிங்கின் முதல்வர் பதவியை பாஜக ராஜிநாமா செய்யவைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மணிப்பூர் மக்களைக் காப்பதற்காக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவில்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: பாராட்டுகளும் குற்றச்சாட்டுகளும்!

மகா கும்பமேளாவில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டியுள்ளார். மகா கும்பமேளாவுக்கு ரூ.10,000 கோடி செலவிட்டும் பிரயாக்ராஜ் மக்களும், பக்தர... மேலும் பார்க்க

மகா கும்பமேளா வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு உணவளிக்கும் காவல் துறை!

மகா கும்பமேளாவுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு மத்தியப் பிரதேச காவல் துறையினர் உணவளிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கும்பமேளாவுக்குச் செல்லும் பக... மேலும் பார்க்க

சிபில் ஸ்கோர் பத்திரம்.. கடனுக்கு மட்டுமல்ல.. கல்யாணத்துக்கும்!

ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை செய்யலாம் என்று வேறு அர்த்தம் கொண்ட பழமொழி ஒன்று மருவி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொய்களைச் சொல்லி திருமணம் செய்பவர்களுக்கு பயன்பட்டு வந்துள்ளது.ஆனால், தற்போது, மகாராஷ... மேலும் பார்க்க