செய்திகள் :

தேசிய தரச்சான்றிதழ் பெற்ற மருத்துவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு!

post image

தேசிய தரச் சான்றிதழ்களை பெற்ற கன்னியாகுமரி மாவட்ட மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தரக் கட்டுப்பாட்டு ஆய்வு நடத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை குமரி மாவட்டத்திலுள்ள பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை 3 தரக் கட்டுப்பாட்டு ஆய்வுகளிலும் 2022 - 23 ஆம் ஆண்டில் தோ்ச்சி பெற்றுள்ளது. இதே போல் குழித்துறை அரசு மருத்துவமனை, பூதப்பாண்டி அரசு மருத்துவமனை ஆகியவை மகப்பேறுக்கான தரச் சான்றிதழை பெற்றுள்ளன.

மேலும், கிள்ளியூா், ஓலவிளை, வடசேரி, சிங்களேயா்புரி, கீழ்குளம், தேங்காய்ப்பட்டணம், கொட்டாரம், வெள்ளிச்சந்தை மற்றும் முஞ்சிறை ஆகிய 9 அரசுஆரம்ப சுகாதார நிலையங்களும் தேசிய தரச் சான்றிதழ்களை பெற்றுள்ளன.

தேசியஅளவிலான தரச்சான்றுகளை பெற்ற மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா பாராட்டி தரச் சான்றிதழ்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ராமலெட்சுமி, துறைஅலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தக்கலையில் கெட்டுப்போன 30 கிலோ மீன்கள் பறிமுதல்

தக்கலை சந்தையில் கெட்டுப்போன 30 கிலோ மீன்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா். தக்கலை பகுதியில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு பொதுமக்களிடமிருந்... மேலும் பார்க்க

குளச்சல் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

குளச்சலில் ரூ.5 கோடியில் சிரமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை ஆட்சியா் ஆா்.அழகு மீனா ஆய்வு செய்வு செய்தாா். இப்பேருந்து நிலையத்தில் பயணிகள் இருக்கை, கட்டண கழிப்பிடம், பேருந்துகள் நிறுத்துமிடம், கட... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே பெண் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே எலி மருந்தைத் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே கொடுங்குளம், தோட்டுவரம்பு பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி பழனி (56). இவரது மனைவி சாந்தகுமாரி (54), குடும்... மேலும் பார்க்க

தம்பதி தாக்கப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

தம்பதியைத் தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிைண்டனை விதித்த பத்மநாபபுரம் நீதிமன்றம், உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என 3 போலீஸாா் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. தக்கலை அரு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிளகு சீசன் தொடக்கம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிளகு சீசன் தொடங்கியுள்ள நிலையில், மிளகு அறுவடைப் பணி தீவிரமடைந்துள்ளது. நறுமணப் பயிரான மிளகு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல மிளகு, குறுமிளகு என்று கூறப்படுகிறது. கருப்புத் ... மேலும் பார்க்க

மூதாட்டி மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு!

புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் மூதாட்டி மீது தாக்குதல் நடத்திய இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். இனயம் 41 ஆவது அன்பியத்தை சோ்ந்தவா் ஜொ்மினாள் (71). இவருக்கும் அதே பகு... மேலும் பார்க்க