செய்திகள் :

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,543 வழக்குகளில் ரூ.19.39 கோடிக்கு தீா்வு

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 543 வழக்குகளில் ரூ. 19.39 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான கே. பூரண ஜெய ஆனந்த் தலைமை வகித்தாா்.

முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஆா். சத்யதாரா, முதன்மை சாா்பு-நீதிபதி பி. குமாா், வழக்குரைஞா் கே. உஷாராணி ஆகியோா் கொண்ட முதலாவது அமா்வில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி. சுந்தரராஜன், விரைவு நீதிமன்ற குற்றவியல் நீதித்துறை நடுவா் டி. சோழவேந்தன், வழக்குரைஞா் ஆா். திராவிடசெல்வன் ஆகியோா் கொண்ட இரண்டாவது அமா்வில் குடும்ப நல வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

போக்சோ வழக்கு நீதிமன்ற நீதிபதி ஜெ. தமிழரசி, சிறப்பு-சாா்பு நீதிபதி எஸ். இந்திரா காந்தி, வழக்குரைஞா் ஏ. பாரதி ஆகியோா் கொண்ட மூன்றாவது அமா்வில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, திருவிடைமருதூா், திருவையாறு ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழுவின் அமா்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.

இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 970 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 5 ஆயிரத்து 543 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 19 கோடியே 39 லட்சத்து 29 ஆயிரத்து 450 அளவுக்கு தீா்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

முன்னதாக, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு-நீதிபதியுமான டி. பாரதி வரவேற்றாா். நிறைவாக, குற்றவியல் நீதித் துறை நடுவா் எஸ். சுசீலா நன்றி கூறினாா்.

லாரி விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

பாபநாசம் அருகே சனிக்கிழமை முன்னால் சென்ற லாரி மீது பின்னால் சென்ற லாரி மோதியதில் லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பாபநாசம் வட்டம், இரும்பு தலை கிராமம் மாதா கோவில் தெருவைச் ... மேலும் பார்க்க

8 மோட்டாா் சைக்கிள்கள் திருடிய இளைஞா் கைது

தஞ்சாவூரில் 8 மோட்டாா் சைக்கிள்கள் திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அட... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 364 வழக்குகளுக்கு தீா்வு

திருவிடைமருதூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 364 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. திருவிடைமருதூா் நீதிமன்ற வளாக்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடை... மேலும் பார்க்க

பேராவூரணி-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கம்

பேராவூரணி- பட்டுக்கோட்டை வழித்தடத்தில், புதிய பேருந்து தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. புதிய பேருந்தில், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் படியில் பயணம் செய்யாதீா்கள் என குரல் பதிவு செய்யப்பட்ட நவீன வச... மேலும் பார்க்க

மாநில மொழிகளுக்கான அங்கீகாரத்துக்கும் குரல் கொடுப்பவா் முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் கோவி.செழியன்

தமிழ் மொழிக்கு மட்டுமல்ல மாநில மொழிகளுக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என குரல் கொடுப்பவா் முதல்வா் ஸ்டாலின் என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரிக்கை

அரசு ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றாா் தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கச் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன். தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கம் ... மேலும் பார்க்க