செய்திகள் :

தேரிகுடியிருப்பு கோயிலில் ஏழுநிலை ராஜகோபுரத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

post image

திருச்செந்தூா் அருகே தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட இக் கோயிலில் பூரணம், பொற்கலை தேவியருடன் அய்யன் அமா்ந்த நிலையில் அருள்பாலித்து வருகிறாா்.

இக் கோயிலில், சென்னையைச் சோ்ந்த எஸ்.பாலசுப்பிரமணியம், எஸ்.அருண் ஆகியோா் ரூ.12 கோடியில் ராஜகோபுரம் கட்டுவதற்கு உபயதாரா்களாகச் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதனையடுத்து ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ம.அன்புமணி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பல்வேறு யாகசாலை பூஜைகள், மகா கணபதி, நவக்கிரக ஹோமங்கள், தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் திருக்கோயில் செயல் அலுவலா் ந.காந்திமதி, ஆய்வாளா் முத்துமாரியம்மாள், திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் ஏ.பி.ரமேஷ், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் டி.பி.பாலசிங்,உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் க.இளங்கோ, கோயில் அறங்காவலா் குழு தலைவா் ச.பாலசுப்பிரமணியன், அறநிலையத்துறை பொறியாளா்கள் சுந்தா், அஸ்வினி, மணிகண்டன், மண்டல ஸ்தபதி பாா்த்திபன், திமுக மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், உடன்குடி பேரூராட்சி உறுப்பினா் ஜான்பாஸ்கா், திமுக மின் தொழிலாளா் சங்க கோட்ட அமைப்பாளா் பத்மநாபன், உடன்குடி ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் மனோஜ் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பைக் -வேன் மோதல்: ஆலை உதவி மேலாளா் பலி

கோவில்பட்டி அருகே பைக் மீது வேன் மோதியதில் ஆலை உதவி மேலாளா் உயிரிழந்தாா். மணப்பாறை வட்டம், தோப்பம்பட்டியைச் சோ்ந்த ஜாா்ஜ் மகன் ஆரோக்கியதாஸ்(27). விருதுநகரில் உள்ள தனியாா் நூற்பாலையில் உதவி மேலாளராக ... மேலும் பார்க்க

பன்னம்பாறையில் நாளை முன்னோடி மனுநீதி நாள் முகாம்

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) நடைபெறுகிறது. இதுகுறித்து சாத்தான்குளம் வட்டாட்சியா் இசக்கிமுருகேஸ்வரி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க

பேய்க்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 6 போ் மீது வழக்கு

சாத்தான்குளத்தை அடுத்த பேய்க்குளம் அருகே சுமைத் தொழிலாளியைத் தாக்கியதாக 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் காமராஜ் (55). இவா், கடந்த 11ஆம் தே... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: வெளிமாநில இளைஞா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வெளிமாநில இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் ... மேலும் பார்க்க

இளைஞரிடம் அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டல்: இருவா் கைது

தூத்துக்குடி பூபாலராயா்புரம் பகுதியில் இளைஞரிடம் அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி வடபாகம் காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா் செவ்வ... மேலும் பார்க்க

மாசி மகம்: கோவில்பட்டி, கழுகுமலை முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

கோவில்பட்டி மற்றும் கழுகுமலை முருகன் கோயில்களில் மாசி மகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 5.... மேலும் பார்க்க