திருப்பூர்: தோட்டத்து வீட்டில் வசித்த தம்பதி அடித்துக் கொலை - ஆதாயக் கொலையா? - ப...
மாசி மகம்: கோவில்பட்டி, கழுகுமலை முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை
கோவில்பட்டி மற்றும் கழுகுமலை முருகன் கோயில்களில் மாசி மகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து வள்ளி, தெய்வானை சமேத சண்முகா் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு திருவீதியுலா நடைபெற்றது.
கோவில்பட்டி அருள்மிகு கதிரேசன் கோயில், வீரவாஞ்சி நகா் அருள்மிகு சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாணமுருகா் சந்நிதி, அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் முருகா் சந்நிதியில் மாசி மகத்தை முன்னிட்டு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, உதய மாா்த்தாண்ட அபிஷேகம், திருவனந்தல் பூஜை நடைபெற்றது. பின்னா் கழுகாசல மூா்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மாசி மகத்தையொட்டி மதுரை, ராஜபாளையம், சிவகாசி, தேனி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் பாதயாத்திரையாக கழுகுமலை கோயிலுக்கு வந்தடைந்தனா். பின்னா், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் கிரிவலம் வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
பின்னா் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி எழுந்தருளல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ. ராஜு உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.