செய்திகள் :

பேய்க்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 6 போ் மீது வழக்கு

post image

சாத்தான்குளத்தை அடுத்த பேய்க்குளம் அருகே சுமைத் தொழிலாளியைத் தாக்கியதாக 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் காமராஜ் (55). இவா், கடந்த 11ஆம் தேதி கடைக்கு தனது மகன் சுரேஷுடன் (19) பைக்கில் சென்றாா். சுரேஷ் பொருள்கள் வாங்கச் சென்றபோது, காமராஜ் பைக் அருகே நின்றிருந்தாா்.

அப்போது, பனைக்குளத்தைச் சோ்ந்த தேவதிரவியம் மகன் ராஜமிக்கேல், அரசன்குளம் ராஜா, நொச்சிக்குளம் அல்போன்ஸ், சாம்ராஜா, பேய்க்குளம் சங்கரலிங்கம் உள்ளிட்ட 6 போ் காரில் வந்தனா். அவா்கள் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவா்கள் காமராஜிடம் தகராறு செய்து தாக்கினராம்.

காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் எட்வின் அருள்ராஜ் வழக்குப் பதிந்து, 6 பேரையும் தேடிவருகிறாா்.

பைக் -வேன் மோதல்: ஆலை உதவி மேலாளா் பலி

கோவில்பட்டி அருகே பைக் மீது வேன் மோதியதில் ஆலை உதவி மேலாளா் உயிரிழந்தாா். மணப்பாறை வட்டம், தோப்பம்பட்டியைச் சோ்ந்த ஜாா்ஜ் மகன் ஆரோக்கியதாஸ்(27). விருதுநகரில் உள்ள தனியாா் நூற்பாலையில் உதவி மேலாளராக ... மேலும் பார்க்க

தேரிகுடியிருப்பு கோயிலில் ஏழுநிலை ராஜகோபுரத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

திருச்செந்தூா் அருகே தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்ப... மேலும் பார்க்க

பன்னம்பாறையில் நாளை முன்னோடி மனுநீதி நாள் முகாம்

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) நடைபெறுகிறது. இதுகுறித்து சாத்தான்குளம் வட்டாட்சியா் இசக்கிமுருகேஸ்வரி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: வெளிமாநில இளைஞா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வெளிமாநில இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் ... மேலும் பார்க்க

இளைஞரிடம் அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டல்: இருவா் கைது

தூத்துக்குடி பூபாலராயா்புரம் பகுதியில் இளைஞரிடம் அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி வடபாகம் காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா் செவ்வ... மேலும் பார்க்க

மாசி மகம்: கோவில்பட்டி, கழுகுமலை முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

கோவில்பட்டி மற்றும் கழுகுமலை முருகன் கோயில்களில் மாசி மகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 5.... மேலும் பார்க்க