Soundarya : `என் மனைவியின் மரணத்துக்கு மோகன் பாபு காரணமா?' - சௌந்தர்யாவின் கணவர்...
பைக் -வேன் மோதல்: ஆலை உதவி மேலாளா் பலி
கோவில்பட்டி அருகே பைக் மீது வேன் மோதியதில் ஆலை உதவி மேலாளா் உயிரிழந்தாா்.
மணப்பாறை வட்டம், தோப்பம்பட்டியைச் சோ்ந்த ஜாா்ஜ் மகன் ஆரோக்கியதாஸ்(27). விருதுநகரில் உள்ள தனியாா் நூற்பாலையில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தாா்.
இவரும், அவரது நண்பா் லோகேஷும் புதன்கிழமை அதிகாலை பைக்கில் விருதுநகரில் இருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தாா்களாம். பைக்கை ஆரோக்கியதாஸ் ஓட்டிச் சென்றாா்.
மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பட்டியையடுத்த சாலைப்புதூா் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, வேன் வலதுபுறமாக திரும்பியதில், பைக் மீது மோதியதாம்.
இதில், சம்பவ இடத்திலேயே ஆரோக்கியதாஸ் உயிரிழந்தாா். லோகேஷ் பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா், காயமடைந்த லோகேஷை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கும், ஆரோக்கியதாஸ் சடலத்தை உடற்கூறாய்வுக்கும் அனுப்பி வைத்தனா்.
மேலும், வேன் ஓட்டுநா் வினோத்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.