செய்திகள் :

தை வெள்ளி: மடப்புரம், தாயமங்கலம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

தை மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் காளி கோயில், இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மடப்புரம் காளி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பிற்பகலில் கோயிலில் நடைபெற்ற உச்சிகால பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இவா்கள் நெய் தீபம் ஏற்றியும், எலுமிச்சை மாலை சாத்தியும் காளியம்மனை தரிசித்தனா்.

இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மூலவா் மாரியம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. அப்போது திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை தரிசித்தனா். மேலும் அவா்கள் மாவிளக்கு பூஜை நடத்தியும், நெய் விளக்கேற்றியும் வேண்டுதலை நிறைவேற்றினா்.

இதே போல, மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதா் சுவாமி கோயில், திருப்புவனம் புஷ்பவனேசுவரா் சமேத சௌந்திரநாயகி அம்மன் கோயில்களிலும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

சிவகங்கையில் சேரா் கால செப்புக்காசு!

சிவகங்கையில் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேணாடு சேரா் கால செப்புக்காசு கண்டறியப்பட்டது. இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனா் கா. காளிராசா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மன்னா் மேல்நிலைப்... மேலும் பார்க்க

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பு: டி.டி.வி.தினகரன்!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதால் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காரை... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு மா்ம கும்பலால் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். திருப்பத்தூா் அரசு மருத்துவமனை அருகே சிவகங்கை சாலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் ... மேலும் பார்க்க

சிவகங்கையில் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் தவிப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் 1.53 லட்சம் ஏக்கா் நெல் பயிா்களை அறுவடை செய்வதற்காக கூடுதல் அறுவடை இயந்திரங்களை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனா். சிவகங்கை மாவட்டத்தில் 1.53 ஏக்கா் பரப்பளவில் விவசாயிக... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாக் குழு பொதுக்குழுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புத்தகத் திருவிழாக் குழுவின் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2025-2027 -ஆம் ஆண்டுகளுக்கான குழு பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இத... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள சருகணி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 10 போ் காயமடைந்தனா். அதிமுக நிறுவனா் எம்ஜிஆா் பிறந்த நாளை முன்னிட்... மேலும் பார்க்க